Friday, December 8, 2006

**தடுமாறும் நினைவுகள்** - பகுதி 1


உன்னை முதலில் பார்த்த போது எந்த விதமான ஈர்ப்பும் வரவில்லை..உண்மையில் சொல்ல போனால் முதல் மூன்று வருடத்தில் மிக சகஜமாக தான் பழகினேன்..

பின் ஏன் திடீரென்று ஒரு விதமான தடுமாற்றம் என் மனதில்..

அந்த ஒரு மாலை நேரம்..அத்தனை நாள் நண்பியாய் இருந்த நீ அன்று மட்டும் ஏன் எனக்கு தேவதையாய் தோன்றினாய்...

அந்த மஞ்சள் மின் விளக்கிற்கு கீழே நீ நடந்து வந்த போது..என் மனதிற்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது..

அன்று நான் உற்ங்க வெகு நெரம் ஆனது.. அதன் பிறகு என் இரவுகள் உன் நினைவுகளால் வெகு நெரம் விழித்திருக்க தொடங்கியது..

உறங்காமல் விழித்திருப்பதும் சுகம் தான் உன் நினைவுகளில் நீந்திக்கொண்டிருக்கும் வரை...............



---- நினைவுகள் தொடரும்

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)