Tuesday, April 13, 2010

பள்ளிக்கூட பயணங்கள் - சிறுகதை

"அம்மா சீக்கிரம்மா பள்ளியோடத்துக்கு நேரம் ஆச்சு. அங்க பாரு பக்கத்துக்கு வீட்டு ராமு எனக்காக ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கான். " செல்வத்தின் குரலில் பசியை விட அவசரம் மேலோங்கி இருந்தது.

"இருப்பா ராசா இதோ ரெண்டு நிமிஷம்"

"அம்மா இன்னிக்கு ஒரு நாள் சாப்பிடாம போறேன்மா. ராமு ரொம்ப நேரமா நிக்கிறான்மா . பள்ளியோடதுக்கு வேற நேரமாச்சு"

"இதோ ஆச்சு பாரு. அவனையும் கூப்பிடு ரெண்டு பேரும் சேந்து சாப்டுட்டு கெளம்புங்க"

"ஏலே ராமு வாடா. சாப்டு கெளம்புவோம். அம்புட்டு தூரம் நடக்க தெம்பு வேணும்ல"

பத்து நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு இருவரும் நடக்க தொடங்கியிருந்தார்கள். தினமும் இருவரும் ஒன்றாக சென்றுகொண்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் பேசுவதற்கு புதிதாக ஏதாவது கிடைத்து கொண்டே இருக்கும்.

"டேய் செல்வம் என்னடா கை எல்லாம் காச்சு கெடக்கு"

"பை ரொம்ப கணம்டா. பிடி கைல அறுத்து அறுத்து கை காச்சு போயிடுச்சு"

"நீயும் என்ன மாதிரி முதுகுல மாட்ற பை வச்சுக்கிட்டா வசதியா இருக்கும்ல "

"அது சரி. இவளவையும் அந்த பைல வைக்க முடியுமா"

"சரி விடு.ஒரு பைய எங்கிட்ட குடு நான் செத்த தூரம் தூக்கிட்டு வரேன்"

"பரவால்லடா. நானே தூக்கறேன். அப்புறம் உன் கை காச்சு போன உங்க ஆத்தா என்ன வையும்"

"அதுவும் சரி தான். அப்புறம் கேக்கணும்னு நெனச்சேன். நாளைக்கு என்ன உங்க வீட்ல விசேசமா. உங்க ஆத்தா ரவைக்கு சாப்பிட
வர சொன்னுச்சு "

"அதாடா ராமு. என் அப்பன் செத்து ஒரு வருஷம் ஆச்சாம் அதுக்கு எதோ பலகாரம் எல்லாம் செய்வாங்களாம். அதுக்கு வர சொல்லிருக்கும்"

"அப்படியா. கேட்டதுமே எச்சி ஊருது டா. நீ பள்ளியோடத்துக்கு கொண்டு வருவியே முறுக்கு, அதிரசம் எல்லாம். அது மாதிரி செஞ்சு குடுன்னு என் ஆத்தா கிட்ட கேட்டேன்டா , செஞ்சே தர மாட்டேங்குறாங்க. நீ கொண்டு வர பலகாரம் எல்லாம் அவளவு ருசிடா. தெனமும் அத வீட்ல சாப்ட நீ குடுத்து வச்சுருக்கணும்டா "

"அட போடா. நான் எங்க தெனமும் சாப்டறேன். நீ நாளைக்கு வா எல்லா பலகாரமும் இருக்கும். வயறு முட்ட சாப்டலாம்"

" சரிடா. இதோ பள்ளியோடம் வந்திடுச்சு பாரு. சாயந்திரம் இங்கயே இருடா நான் வந்திர்றேன்"

"சரிடா ராமு. நான் என் வேலைய பாக்றேன். முறுக்கு முறுக்கே! முறுக்கு முறுக்கே! முறுக்கு முறுக்கே"

9 comments:

VISA said...

Kalakkal......Really nice!!!

நிலாமதி said...

பள்ளி வாழ்க்கை ..தோழமை....மீட்டும் நினைவுகள் அருமை.....

மனுநீதி said...

நன்றி விசா மற்றும் நிலாமதி

A Recluse said...

Romba arumayana Kadhai, Manu... Kadaisiyil Murukku Murukke endru sollum idam satru manadhai murukki thaan parkiradhu... Indrum nam naatil kalvi enbadhai vida sambathiyam thaan mudhalil soru podum endru unarthum kadhai... :)

மனுநீதி said...

Thank you Stranger.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அருமையான கதை.

மனுநீதி உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

மனுநீதி said...

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஸ்டார்ஜன் .

Unknown said...

Good one. The last line shook me!

மனுநீதி said...

Thanks Kishore.

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)