Sunday, August 1, 2010

கண் மணியே பேசு - 3


கணேஷின் மனதின் ஓட்டத்திற்கு காரும் ஈடு கொடுத்ததால் முதலில் அந்த இடத்திற்கு சென்றார். அவர் சென்ற ஐந்தாவது நிமிடம் அவரது ஆட்களும் வந்தனர்.

நேரம். பன்னிரெண்டே முக்கால் .

அவருக்கு முன்னர் அங்கு வந்து சென்ற நான்கு கண்களையும் அங்கு வரப்போகும் போலீஸ் பற்றியும் கணேஷ் அறிந்திருக்கவில்லை.

"டேய் வாங்க தோண்ட ஆரம்பிப்போம். என் பொண்டாட்டி கணக்கு படி போலீஸ் வர இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல இருக்கு"

"என்ன பாஸ் சொல்றீங்க. போலீஸ் வராங்களா. எங்களுக்கு ஒண்ணுமே புரில"

"அதெல்லாம் அப்புறம் சொல்றேன். முதல்ல தோண்டுவோம் வா"

அனைவரும் தோண்டுவதற்கு ஆயத்தமானார்கள்.

பாதி தோண்டி முடித்த நிலையில் அந்த பெண்ணின் பிணம் இருப்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை.

"டேய்.. இடம் கரெக்ட் தான? "

"நிச்சயமா இதே இடம் தான் பாஸ். ஆனா அதுக்குள்ள பொணம் எங்க போயிருக்கும்னு தான் புரில"

"பிரச்சனை பெருசா ஆய்ட்டே இருக்கு டா "

"பாஸ் . பாஸ் . போலீஸ் வண்டி வருது" நொடியில் அனைவரையும் கிலி ஆட்கொண்டது.

கணேஷ் உறைந்திருந்தார்.

"இந்த நேரத்துல ..இங்க எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க" இளமாறன் மிரட்டலில் அனைவரும் அதிர்ந்தனர்.

"அது வந்து சார். வண்டி ரிப்பேர் ஆய்டுச்சு அதான் நிறுத்தி பாத்துட்டு இருக்கோம்" கணேஷ் சமாளிக்க முற்பட்டார்.

"அங்க என்ன பள்ளம் நோண்டுன மாதிரி இருக்கு" இளமாறன் தொடர்ந்தார்.

"அது ..... அது...." கணேஷ் திணறினார்.

"கான்ஸ்டபல் நீங்க அங்க போய் செக் பண்ணி பாருங்க"

"சார் என் பேரு கணேஷ். நான் மெட்ராஸ்ல பெரிய பிசினஸ் மேன். நீங்க என்ன சந்தேகபடுறது நல்லா இல்ல. நாங்க எல்லாரும் கடலூர் போயிடு இருக்கோம். நடுவுல இந்த பசங்க இங்க சுண்டக்கஞ்சி புதைச்சு வச்சிருகாங்கனு ஆசைப்பட்டு தேடிட்டு இருந்தாங்க அதான் பள்ளம்"

"அப்படியா சரி எல்லாரும் ஸ்டேஷன் வாங்க. அங்க பேசலாம்"

தூரத்தில் கான்ஸ்டபல் குரல் கேட்டது.

"என்ன கண்ணையன் எதாவது கெடச்சுதா "

"பள்ளத்துல ஏதும் இல்ல சார். ஆனா ஒரு பேப்பர் கேட்குது. லெட்டர் மாதிரி இருக்கு. இருட்டுல என்ன எழுதிருக்குனு தெரில"

"சரி இங்க கொண்டு வாங்க கார் லைட் வெளிச்சத்துல படிப்போம்"

கணேஷுக்கு அந்த வேளையிலும் வியர்த்து வழிந்து கொண்டிருந்தது. அவரது ஆட்களுகோ என்ன நடக்கிறது என்று விளங்கவில்லை. ஆனால் கணேஷ் இருக்கும் வரை பிரச்சனை இல்லை என மட்டும் நம்பினார்.

இளமாறன் லெட்டரை வாங்கி காரின் முன் நின்று படிக்கச் தொடங்கினார். கணேஷின் இதயத்துடிப்பு நொடிக்கு மூன்று முறை அடித்துகொண்டிருந்தது.

இளமாறன் கையில் கடிதம். சாவித்திரி சொன்னது போலவே.

"கண்ணையன் கார் ஹெட் லைட்ட ஆன் பண்ணுங்க "

கண்ணையன் உடனே ஆன் செய்ய இளமாறன் கடிதத்தை படிக்க தொடங்கினார்.

"அன்புள்ள காதலி ப்ரீத்திக்கு ... இது எதோ லவ் லெட்டர் மாதிரி இருக்கு".

கணேஷ் நீண்ட நேரம் கழித்து சுவாசிக்க தொடங்கியிருந்தார்.

திடீரென அவர் பார்வை இளமாறனின் கையை கவனித்தது. இளமாறன் கையில் கடிகாரம் இல்லை.

அவர் எண்ணத்தை கேட்டது போலவே கான்ஸ்டபல் கண்ணையன் கேட்டார்.

"சார் கைல வாட்ச் இருந்ததே காணும் "

"நான் தான் ஜீப்லையே கழட்டி வச்சுட்டு வந்தேன். சரி வெறும் லவ் லெட்டர் தான். காத்துல பறந்து வந்திருக்கு. Mr.கணேஷ் உங்க கார்டு குடுத்துட்டு போங்க. நான் வேற எதாவது தேவைன கால் பண்றேன்"

கணேஷ் கார்டை குடுத்து அவரிடம் விட்டு விடைபெற்றார். தற்காலிகமாக.

"டேய் நீங்க பாண்டிச்சேரிலயே இருங்க. மேற்கொண்டு என்ன பண்ணனும்னு நான் சொல்றேன். நான் உடனே வீட்டுக்கு போகணும் இல்லனா என் பொண்டாட்டிக்கு சந்தேகம் வந்துரும்"

"சரி பாஸ்"

கார் சென்னைக்கு விரைந்தது.

பிணம் எங்கே போனது. சாவித்திரி சொன்னது போல லெட்டர் இருந்தது ஆனால் இன்ஸ்பெக்டர் கையில் கடிகாரம் இல்லையே. லெட்டரும் எதோ லவ் லெட்டராக போய் விட்டது. இரண்டு மணிக்கு வர வேண்டிய போலீஸ் ஒரு மணிக்கே ஏன் வந்தது. போலீஸ் ஸ்டேஷன் வர வேண்டும் என முதலில் சொன்ன இளமாறன் பின்னர் விட்டது ஏன். அனைத்தும் புதிராகவே இருந்தது

கணேஷ் யோசித்து கொண்டிருந்த நேரம் இன்னொரு காரில் அந்த நான்கு கண்களின் சொந்தகாரர்கள் பயணித்து கொண்டிருந்தனர்.

இருவரும் போலீஸ் உடையில். கையில் டைட்டன் கடிகாரம் நேரத்தை ஒட்டி கொண்டிருந்தது. பையில் ஒரு கடிதம். வண்டியில் நிர்மலாவின் உடல்.

(திகில் தொடரும்)

5 comments:

அருண் said...

அடுத்து என்ன நடக்கும்னு ஆர்வமா இருக்கு,கூடிய சீக்கிரமே எழுதுங்க.

A Recluse said...

Nalla thiruppam... Next part kudiya seekiram release pannunga!!!

மனுநீதி said...

வருகைக்கு மிக்க நன்றி. கூடிய விரைவில் அடுத்த பகுதியை எழுதுகிறேன் அருண்பிரசாத் .


Thanks Strange. Next part coming soon.

VISA said...

sema pinnal. continue...continue....

ஓவியா said...

Super Twist...Very interesting...

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)