Wednesday, December 26, 2007

பூவே பூச்சூடவா lyrics

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா.

(பூவே)

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்த்தேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
தீப தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் மெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

(பூவே)

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பை எரித்தாலும்தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறென் அதில் என் முகம் பார்க்கிறென்
இந்த பொன்மானை பார்த்து கொண்டேசென்று நான் செர வேண்டும்
மீன்டும் ஜென்மங்கள் மாறும் போதும் நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

(பூவே)

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)