Monday, August 3, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 1

தட்டு நிறைய காதலை வைத்து
நீ எடுக்க காத்திருக்கும்
நானும் பிச்சைக்காரன்

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

என்னவளின் கை பட்டு
வெட்கத்தில் சிவந்தது மருதாணி.

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

மலர்களின் கர்வம்
உன் கூந்தலேறியபின்
உச்சமடைகிறது

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

கடற்கரைக்கு சென்று
வானம் பார்த்து
கப்பல் பார்த்து
மக்கள் பார்த்து
நிலவு பார்த்து
மணல் நோண்டி
சிப்பிகள் தேடி
கால்கடுக்க காத்திருந்து
வானம் கறுத்து
மக்கள் கரைந்து
கப்பல் மறைந்து
நிலவை சாட்சியாக்கி
கடலுக்குள் ஓடினான்
காதலுக்குள் ஓடமுடியாததால் ...

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

நிலவின் காதலை மறுத்து
அது தேய்வதை நகைக்கிறாய்
அதாவது துக்கத்தை மறந்து வளர்ந்துவிடும்
நான் தூக்கத்தை மறந்து
தேய்ந்து கொண்டே இருக்கின்றேன்
உன் நினைவில் ..

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

கவிதைகளின் உற்பத்திக்கூடமே
காதலின் பிணக்கூடமே
பிரம்மன் செய்த சிறந்த தவறே
காலனிடம் சொல்லியிருக்கிறேன்
உன்னை கூட்டி செல்ல சொல்லி
நரகத்தில் காதல் பற்றாக்குறையாம்
சித்திரவதைகளின் கருவறையே
நீ சென்று விடு
இனிவரும் காதல்களும்
கவிதைகளுமாவது பயனுள்ளதாக இருக்கும்

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

2 comments:

நிலாமதி said...

அழகிய கவி வ ரிகள் ....அத்தனையும் முத்துக்கள். நட்புடன் நிலாமதி

மனுநீதி said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிலாமதி

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)