Wednesday, September 16, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 4

வெயிலில் உழைத்து
குடிக்காமல் சேமித்து
ஆசையாய் படம் பார்த்தேன்
உழைப்பின்றி படமெடுத்து
என் வார உழைப்பை
பிடுங்கி கொண்டார்கள்

---------------------------

வருமென்று எதிர்பார்த்து
தயாராய் புறப்பட்டு
பயந்தபடி சென்ற நேரம்
அது வரவில்லை
சுள்ளென வெயில் சுட
உள்பனியன் கூட போடாமல்
வெள்ளை சட்டை போட்ட நேரம்
எங்கிருந்தோ எட்டி பார்த்து
ஏளனம் செய்தது
என்னை அழுக்காக்க
வந்த அந்த மழை.

------------------------------

எங்கள் தெரு சாலையெல்லாம்
தார்க்கோலம் பூண்டது
அடுத்த வாரம்
மழை நிச்சயம்

---------------------------------

எட்டி பார்க்க
விட்டு சிரித்தாள்
கதறி அழுதாள்
தொட்டு துடைக்க
அழுகை நிறுத்த
மீண்டும் சிரிக்க
கைகள் நீட்டினேன்
எட்டவில்லை
கதறி அழுதேன்
சிரித்தாள்
பிடித்திருந்தது
தொடர்ந்து அழுதேன்
அம்மா உள்ளேசென்றாள்
கூடவே இடுப்பிலிருந்த நானும்

2 comments:

VISA said...

வருமென்று எதிர்பார்த்து.......
very nice one

VISA said...

My favvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvourite song in ur blog

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)