Monday, September 14, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 5

மதிய நேரம். பசி வயிற்றை கிள்ளிகொண்டிருந்தது . ராம் இந்த இடத்தை விட்டு சிறிது நேரம் விலகி போய் சாப்பிட்டுவரலாம் என சங்கருக்கு போன் செய்தான். சுவிட்ச் ஆப் என்ற தகவலே வந்துகொண்டிருந்தது . வேறு வழியில்லாமல் வண்டியை பூட்டி விட்டு சாப்பிட கிளம்பினான்.

சாந்தாராமின் வீட்டு காவலாளியிடம் சொல்லி விட்டு கிளம்பலாம் என்ற கடைசி நேர யோசனையுடன் அவனிடம் சென்றான்.

"இந்தாப்பா அன்னைக்கு உன்கிட்ட வந்து ஒருத்தர் காசு கொடுத்து இந்த வீட்ல சந்தேகபடுற மாதிரி யாராவது வந்த சொல்ல சொன்னாருல அவரோட அசிஸ்டன்ட் நான். இப்ப சாப்பிட போறேன் அதுக்குள்ள யாராவது வந்தா இந்த நம்பர்க்கு போன் பண்ணு "

"சார் நானும் சாப்பிட போறேன். அய்யா சாப்பிட்டு வெளில கிளம்புவார் அதுக்குள்ள நான் சாப்பிட்டு வரணும் " ராம் வேறு வழியில்லாமல் சங்கரிடம் சமாளித்துக்கொள்ளலாம் என ஹோட்டலுக்கு புறப்பட்டான்.

புறப்பட்ட சில நொடிக்கெல்லாம் அந்த தெருமுனையில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஆள் அரவமற்ற அந்த மதிய வேலையில் அவன் இறங்கி நடந்து வருவதை யாரும் கவனித்திருக்க வில்லை. பழக்கப்பட்டது போல் சாந்தாராமின் வீட்டு கேட்டுக்குள் நுழைந்தான். சில நிமிடங்களில் வீட்டை விட்டு வெளியேறி மறைந்தான் .

ராம் அமிர்தம் உண்ட தேவர் போன்ற பெருமிதத்துடன் மீண்டும் வந்து காரில் அமர்ந்தான். எட்டி பார்த்தான் காவலாளியும் திரும்பியிருந்தான் . உண்ட களைப்பில் கண் சொருக ஆரம்பித்த நேரம் கார் சத்தம் கேட்டு விழித்தான். அந்த கார் உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் சாந்தாராமின் கார் வெளிப்பட்டது .

ராம் ஆர்வமாய் காவலாளியிடம் சென்றான். துக்காராம் நீண்ட தூர பயணம் செல்லும் போது சாந்தாராமின் இந்த காரை எடுத்து செல்வது வழக்கம் தான அந்நேரங்களில் அவர் துக்காராமின் காரை பயன்படுத்தி கொள்வார் என்ற தகவல் கிடைத்தது.

சங்கருக்கு மீண்டும் போன் செய்தான். இம்முறை ரிங் அடிததது ஆனால் சங்கர் தொடர்பை துண்டித்தான்.

ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்ற எண்ணம் ராமை அங்கு தொடர்ந்து காத்திருக்க அனுமதிக்கவில்லை. வண்டியை எடுத்து நேராக சங்கரின் ஆபீஸுக்கு சென்றான்.

சங்கர் அங்கு இல்லை. வெளியில் எட்டி பார்த்து சுரேஷிடம் ஒரு காபி சொல்லி சங்கரின் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தான். இந்த கம்ப்யூட்டரை சங்கரை தவிர யாரும் உபயோகித்ததில்லை அப்படி உபயோகிக்கவும் சங்கர் அனுமதித்ததில்லை .

அதியசமாக இன்று கம்ப்யூட்டர் ஷட்டவுன் செய்யப்படாமல் பயன்பாட்டுக்கிடையிலே அப்படியே விடப்பட்டு இருந்தது. அதில் திறந்திருக்க பட்டிருந்த இணையதளங்கள் மற்றும் அதிலிருந்த கோப்புகள் எல்லாம் ஹிப்னாடிசம் தொடர்புடயதாகவே இருந்தன .

திறந்திருந்த சங்கரின் இ-மெயில் பார்த்தவுடன் ராமிற்கு பகீர் என்றது. இளமாறன் கொடுத்த ஹிட்லிஸ்ட் அவரை சந்திப்பதற்கு ஒரு வாரம் முன்னரே சங்கருக்கு வந்திருந்தது.

ராம் முழுவதுமாக வியர்வையில் நனைந்திருந்தான். கிடைத்த தகவல்கள் நடந்து கொண்டிருக்கும் கொலைகளுடன் தொடர்பு படுத்தி பார்த்து தோற்றுகொண்டிருந்தான். அப்போது தான் டைம்பாம் சம்பந்தபட்ட அந்த கோப்பு அவன் கண்ணில் தென்பட்டது. அதை காரில் பொருத்தி இயக்குவது எப்படி என்ற தகவல்களும் இருந்தது.சாந்தாராம் மற்றும் துக்காராமின் கார்கள் மனதில் நிழலாடியது. எவ்வளவு பெரிய குற்றத்திற்கு தான் துணையாக இருந்திருக்கிறோம் என்ற எண்ணம் அவனை கலங்கடித்தது, ஆனாலும் இந்த தகவல்களை வைத்து சங்கர் தான் கொலைகாரன் என முடிவு கட்ட முடியாது. இளமாறனின் கடிதமும் ராமை குழப்பியது.

அவசரமாக எல்லாவற்றையும் தன்னுடய மெயிலுக்கு அனுப்பி விட்டு போலீஸை தொடர்பு கொண்டு இதை விளக்க வேண்டும் என தீர்மானித்தான். ஆனால் போலீஸ் தன்னையும் இதில் இணைத்து மாட்டிவிடுவார்கள் என தோன்றியதும் தற்போது கோப்புகளை இ-மெயில் மட்டும் அனுப்பிவிட்டு பின்னர் யோசிக்கலாம் என முடிவெடுத்தான்.

பாதி வேலை முடிந்த நிலையில் "சார் டீ" என்ற குரல் கேட்டது.

"அப்படி வச்சிட்டு போ" கணினியிடம் கூறினான்.

சங்கர் டீ கிளாஸை வைத்துவிட்டு ராமை நெருங்கினான்.

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)