Wednesday, November 4, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 6

கண் மூடி விழித்திருந்து
கனவில் உறங்கி போனேன்
கட்டிலில் விழிக்கையில்
என் அருகில் நீ
நித்தமும் உன்னுடன்
நான் விழிக்க என்ன செய்ய
யோசித்த வேளையில்
உறங்கிப்போயிருந்தேன்


----------------------------------------------------------------------------------------



பருவத்து மாற்றங்கள்
முகத்தினில் வெளிப்பட்டு
தழும்பாகி
மறைந்து போனது
மாற்றங்கள் விட்டுசென்ற
ஏக்கங்கள் மறையாமல்
தழும்ப செய்தது.

----------------------------------------------------------------------------------------



தொலைக்க துடிக்கிறேன்
தொலைய மறுக்கிறாய்
தொலைக்க தவிக்கிறேன்
தொலைந்தே போகிறேன்

தொல்லைகளின் எல்லைமீறல்
தொலைகின்றன இரவுகள்
மிச்சமிருக்கும் கனவுகள்
எல்லாம் உன் நினைவுகள்

கண்ணீரின் ஈரங்கள்
காயாத நேரங்கள்
மீட்டெடுத்த சோகங்கள்
கரைத்தன காலங்கள்

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)