Saturday, December 5, 2009

அதே நேரம் அதே இடம் - முதல் முறை உன்னை பார்த்த போதே (Lyrics)

படம்: அதே நேரம் அதே இடம்
இசை: பிரேம்ஜி அமரன்
பாடியவர்கள் : ஹரிச்சரன், திப்பு, ஹரிணி
பாடலாசிரியர் : லலிதானந்த்
பாடலுக்கான சுட்டி:
முதல் முறை உன்னை பார்த்த போதே


முதல் முறை உன்னை பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே

கனவினில் உன்னை பார்க்கும் போதும்
அருகினில் என்னை காண வேண்டும்
உன் அருகே நான் இருந்தால் சிலிர்க்கிறதே

நீ விளையாட்டு பிள்ளை
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை
என்னை தாயை போலே தாங்க வேண்டும் மடியினிலே

முதல் முறை உன்னை பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே

நீ அருகில் தோன்றும் நேரமே
வான் நிலையும் மாறி போகுதே
நீயும் நினைத்தால் வானவில்
வந்து விடுமே

உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் போல வேண்டுமே
உன்னை நினைத்தால் வாழ்விலே
என்றும் சுகமே

உன்னுடன் இருப்பதால்
உயிருடன் இருக்கிறேன்
உனக்கென்ன வேண்டுமா
உயிரையும் தருகிறேன்

நான் உன் மூச்சில் வாழ்வேன்
வரம் அது எந்நாளும் போதும்
நீ சூடும் பூவும் வாடும் போது
வலித்திடுமே

முதல் முறை உன்னை பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே

நீ நடந்தும் போகும் வேலையில்
கால் வலிக்கும் என்றும் கலங்குவேன்
தோளில் சுமந்தே தாங்குவேன்
உன்னை தினமே

தோளிரண்டில் என்னை தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்
நானும் உனையே தாங்குவேன்
நெஞ்சில் தினமே

சூரியன் உதிப்பதே
உன்முகம் காணவே
பூமியில் பிறந்ததே
உன்னுடன் வாழவே

அது மழை மேகம் யாவும்
இறங்கியே உனை தீண்டி ஏங்கும்
இனி கோயில் தேடி போக மாட்டேன்
தெய்வமும் நீ

முதல் முறை உன்னை பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)