Saturday, December 19, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 6 (நிறைவுப் பகுதி)


ராம் சங்கரை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை .

"என்ன ராம் எல்லாம் படிச்சு உண்மையெல்லாம் தெரிஞ்ச மாதிரி இருக்கா?" சங்கரின் தொனி ராமை எரிச்சலூட்டியது .

"சங்கர் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. நடந்த கொலைகளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். இத்தனை நாளஉங்களுக்காக வேலை செஞ்ச என்னை கூட நம்பாம எல்லாத்தயும் எதுக்கு மறைச்சீங்க "

"பொறுமையா இரு ராம். மொத்தமா எல்லாத்தையும் சொல்லலாம்னு தான் இவளோ நாள் காத்திட்டு இருந்தேன். நீ ஆரம்பத்துலையே சொன்ன
மாதிரி இளமாறன் அவளோ நல்லவன் இல்ல. அது எனக்கும் தோணுச்சு, இருந்தாலும் அவன் என்ன தான் பண்ணப்போறான்னு பாக்க
ஒரு ஆர்வம். நம்ம கிட்ட அவன் கொடுத்த ஹிட்லிஸ்ட் மட்டும் தான் நிஜம், மத்தபடிக்கு அந்த துப்பாக்கி தொலைஞ்சு போனதெல்லாம்
கதை"

"என்ன பாஸ் சொல்றீங்க. அப்ப அந்த துப்பாக்கி நம்ம ஆபீஸ்குள்ள வந்ததுக்கும் அவன் தான் காரணமா"

"சந்தேகமே இல்லாம அவன் தான் காரணம். அது மட்டும் இல்ல அந்த ஹிட்லிஸ்ட் தயாரிச்சதே அவன் தான். அத வச்சு ஒரு பெரிய திட்டம்
போட்டிருந்தான். அந்த லிஸ்ட்ல இருக்கவங்க கிட்ட பேர தூக்குறதுக்கு பணம் தரணும்னு ப்ளாக்மெயில் பண்றதுக்கு பிளான். முதல் நாலு பேரு ஒத்து வரல, உடனே அவனே மத்தவங்களுக்கு பயம் வரணும்னு அவுங்கள க்ளோஸ் பண்ணிட்டான் "

"ஒ மை காட்.. என்னால நம்பவே முடியல . "

"அதுக்கப்புறம் தான் அவன் ஒரு திட்டம் போட்டு என்ன சிக்க வைக்க பார்த்தான். முதல் நாலு கொளைகல்ல நம்மல மாட்டி விட்டு மத்தவங்க கிட்ட பணம் வாங்கிட்டு ஹிட்லிஸ்ட மறைக்க திட்டம் போட்டான். மத்தவங்களும் அவன் கிட்ட பணத்த கொடுத்துட்டாங்க "

"ஆனா மத்தவங்களும் செத்துட்டாங்களே சங்கர்"

சங்கர் மெளனமாக ஒரு புன்னகை மட்டும் உதிர்த்தான். ராம் மீண்டும் வியர்க்க தொடங்கியிருந்தான்.

"ராம் மத்த கொலைகள் நடந்தது ஹிட்லிஸ்ட் கணக்க முடிக்க தான் ஆனா செஞ்சது இளமாறன் இல்ல" சங்கரின் சிரிப்பு சப்தம் அதிகமாகி கொண்டிருந்தது.

சங்கர் தொடர்ந்தான் "நீ அடுத்து என்ன கேக்க போறேன்னு எனக்கு தெரியும். மத்த கொளைகல செஞ்சது நானானு தான. அதுக்கு பதில் நானும் தான்"


ராம் தெளிவாக குழம்பியிருந்தான். ஆனால் வார்த்தைகளை உதிர்க்க திராணியில்லாமல் சங்கர் தொடர முகத்தை ஏறிட்டான்.

"ராம் மத்த கொளைகல செஞ்சது இளமாறனுக்கு ஒரு பயத்த உண்டு பண்ண , தவிர அவுங்க எல்லாரும் எப்படியும் சாக வேண்டியவங்க தான். சட்டத்து நால அவங்க கிட்ட கூட நெருங்க முடியாது. அதனால செஞ்ச கொளைகல்ல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. சாந்தாராம் துக்காராம் ரெண்டு பேரையும் கொலை பண்றதுக்கு முன்னால இளமாறன் போன் பண்ணி வர சொன்னான். அவனுக்கு நான் தான் இத பண்றேன்னு கண்டுபிடிக்கிறது ஒண்ணும் கஷ்டம் இல்ல ஆனா எங்க அவர் மாட்டிபாரோனு ஒரு பயம் வந்திடுச்சு. பணம் கொடுத்தவன்
எல்லாம் கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டானுங்க. அதனால இந்த பிரச்சனைல இருந்து அவர வெளில கொண்டு வர, அப்புறம் அவர் செஞ்ச பாவத்துக்கு அவர ..."

"கொலை பண்ணிடீங்களா சங்கர்"

"இல்ல தற்கொலை பண்ணிக்க வச்சிட்டேன்"

"சங்கர் நீங்க எவளோ நியாயம் சொன்னாலும் நீங்க செஞ்சது தப்பு தான். நான் இத போலீஸ்ல சொல்ல தான் போறேன் "

"தாரளமா சொல்லிக்கோ ராம். ஆனா கம்பி என்ன போறது நீயும் தான். ரெட்டை கொலைகள் எப்படி கிட்ட தட்ட ஒரே நேரத்துல நடந்துச்சுன்னு சொல்லனுமா "

"என்ன சொல்றீங்க சங்கர்"

"ரெண்டு கொலையையும் செஞ்சது ஒருத்தன் இல்ல . ரெண்டு பேர். ஒண்ணு நீ இன்னொன்னு நான் "

காற்று ராமின் நாசிகளில் அவசரகதியில் நுழைந்து வெளியேறி கொண்டிருந்தது .

"ஹிப்நாட்டிசம் பத்தி படிச்சியே ராம் அதுல செலக்டிவ் மெமரி எரேசிங் டெக்னிக் பத்தி பாத்தியா. நடந்த நிகழ்வுகல ஒருத்தர் மனசுல இருந்து தடயமே இல்லாம அழிக்கவும் முடியும் அதே மாதிரி நடக்காத ஒரு விஷயத்த நடந்த மாதிரி ஒருத்தர் மனசுல புகுத்தவும் முடியும். அதனால நீ கொளைகல பண்ணினது உனக்கு நிச்சயமா நினைவுல இருக்காது .இப்ப நம்ம பேசிட்டு இருந்தத கூட உன் நினைவுல இருந்த என்னால சுத்தமா அப்புறபடுத்த முடியும். அப்புறம் இளமாறன் மனசுக்குல தற்கொலை பணிகனும்ன்ற எண்ணத்த புகுத்தினேன் வேலை சுலபமா
முடிஞ்சுது. சாந்தாராம் துக்காராம் விஷயத்துல அவுங்க கிட்ட நெருங்கறது ரொம்ப கஷ்டமா இருந்ததுனால அவுங்களே ஒருத்தர் கார்ல இன்னொருத்தர் பாம் வச்சதா செட் பண்ணி ஒருத்தர் சாக இன்னொருத்தர் ஜெயில் போக பிளான் பண்ணிட்டேன். குடும்ப சண்டை காரணம்னு ஆனதுனால அவளோ சீக்கிரம் வெளில வர முடியாது. இப்போ எல்லாம் புரிஞ்சுதா ராம். என்ன முடிவு எடுத்திருக்க "

ராம் சற்று தெளிந்திருந்தான். " பாஸ் இப்ப நடந்தத என் மனசுல இருந்து எரேஸ் பண்ணிடுங்க. அடுத்ததடவை தயவு செஞ்சு என்கிட்டே முன்கூட்டியே சொல்லிடுங்க"

சங்கர் சிரித்தான் அதில் மன திருப்தியுடன் ஒரு திட்டத்தை தயார் செய்து நடத்தி காட்டிய வெற்றி தெரிந்தது.


(முற்றும்)

3 comments:

VISA said...

ஓய் கடைசி பகுதி செம விறுவிறுப்பு. அம்மாடி இத்தன கொலையா. கடைசி பேரால ஹிப்னாடிசம் எல்லாம் கொண்டு வந்து கொலையை மறச்சு செம கிரைம் தொடர்.....

மனுநீதி said...

நம்ம கதைகள்ல கொலைகள் இல்லன தான் அதிசயம் :D . இந்த ஹிப்நாட்டிசம் மேட்டர் இந்த கதைல ரொம்ப கம்மியா தான் யூஸ் பண்ணிருக்கேன்.மேற்கொண்டு இத பத்தி அப்புறமா பேசுவோம். நாளைக்கு தமிழ்மணத்துல சேத்துட்டு சொல்லலாம்னு நெனச்சேன் அதுக்குள்ள படிச்சிட்டீங்க.:)

A Recluse said...

Romba arumayana kadhai... :) Oru second Shankar thaan villain nnu ninaikka vachiruchu... aana oru villainaavum illama hero vavum illama super ah mudichiteenga... Indha madhiri neriya Crima Novel ezhudhunga... Nalaikku Rajesh Kumar novels vida manuneedhi novels ellarum travel pandroppa eduthuttu poganumnnu ninaikaren :)

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)