Sunday, March 8, 2009

ஓராயிரம் பார்வையிலே - வல்லவனுக்கு வல்லவன்

பழைய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவைகளில் இது நிச்சயம் முதல் இடம் பிடிக்கும். கண்ணதாசனின் வரிகளும் TMS-ன் குரலும் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனதை என்னவோ செய்யும். அந்த உணர்வுகளை வார்த்தைகளால் விளக்க முடியாது.


பாடல்: ஓராயிரம் பார்வையிலே 
படம் : வல்லவனுக்கு வல்லவன்
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

ஓராயிரம் பார்வையிலே   
உன் பார்வையை நானறிவேன்
இந்த மானிடர் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்
இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களைத் தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்


1 comments:

VISA said...

I also love this song. Many times it has taken me to different world with various depths.

Very choosy!!!

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)