Friday, March 20, 2009

குறுங்கவிதை - காதல்

எதிர்பாராமல் எதிரினில் வந்தாய்
என் எதிர்காலம் எதிர்படாமல் போனது
நிகழ் காலம் நிகழாமல் போனது
உன் கண்களை நான் கடந்த காலம்
மட்டுமே நினைவில்.

------------------------------------------------------------------------

ஓர விழி பார்வையால் என்னை பார்த்தாய்
உன்னை பிடிக்கும் என்றேன்
மௌனம் உதிர்த்தாய்

என்னை கடக்கும் போது உன் உதட்டுபுன்னகை
மீண்டும் உன்னை பிடிக்கும் என்றேன்
மௌனம் உதிர்த்தாய்

நீ நடக்கும் போது, கடக்கும் போதும்
என் கண்கள் உன்னில்

நீயும் அப்படிதான்
மறுக்காமல் மனதை கேட்டுப்பார்

உன்னை பிடிக்கும் என ஓராயிரம் தடவை மனம் சொன்னாலும்
நான் மௌனம் பழகிவிட்டேன்

நீ பேச பழகி கொள்.
காத்திருக்கிறது என் ஊமை காதல்.

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)