Monday, February 16, 2009

சட்டேன்று ஒரு காதல் - பகுதி 3

"ஆமாடா இளமாறா .. கல்யாணத்த இன்னும் ரெண்டு மாசத்துல வைக்கணும்னு அவுங்க அப்பா சொல்லிட்டாரு..அதுக்கு எங்க அப்பாவும் ஒத்துகிட்டாரு"

"டேய்..நீ உண்மையிலே அந்த பொண்ண லவ் பண்றியா"

"அது வந்து.."

"ஒரு வெங்காயமும் வேணாம்.. கல்யாணத்த நீ தள்ளி போட முடியாது.. .. நீங்க வெறும் செஸ் காய்கள் தான் இனிமே"

"இப்ப என்ன பண்ணலாம்னு சொல்றே"

"பேசாம கல்யாணத்த பண்ணிக்கோ.. வேற சாய்ஸ் எதுவும் இல்ல"

"சரி.. நடக்கிறது நடக்கட்டும்"

செல்போன் சிணுங்கியது ...

"சுரேஷ் நம்ம கல்யாண டேட் பிக்ஸ் பண்ணிட்டாரு அப்பா"

"என்னைக்கு "

"அடுத்த மாசம் ஆறு "

"அவளவு சீக்கிரமாவா"

"ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு.. சந்தோஷத்தையே காணுமே"

"இல்ல இல்ல லேசா தலைவலி அவளோ தான"

"சரி நான் நாளைக்கு கால் பண்றேன்"

..
"இளமாறா சுரேஷ் பேசுறேன்"

"சொல்லு"

"டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்கடா"

"என்னைக்கு"

"அடுத்த மாசம் ஆறு"

"அவளோ சீக்ரமா.. சரி என்ஜாய் பண்ணு.."

"ம்ம்ம்.. உன்கிட்ட சொல்லனும்னு தோணிச்சு.. இன்விடசன் ரெடி ஆனா ஒடனே சொல்றேன் டா "

"சரி சரி"

இரு வாரங்களுக்கு பிறகு..

"இந்தாடா இன்விடசன் கண்டிப்பா வந்துடனும்"

"வராம இருப்பேனா"

"எல்லாருக்கும் கொடுத்துட்டேல"

"இனிமே தான கொடுக்கணும்"

"சரி நீ கெளம்பு.. கல்யாணத்துல மீட் பண்ணுவோம்"

பிப்ரவரி ஆறு ...

"கல்யாணத்துக்கு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்"

"டேய் டேய்.. அடங்குடா.. ரொம்ப பெரியவன் மாதிரி பேசாத .. ஓவரா பேசுன .. பால்ய விவாகம்னு கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்"

" ஹா ஹா ஹா"

"தொடர்கதையா பல காதல்கள் இழுத்துகிட்டு இருக்கும் போது சிறுகதை மாதிரி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டீங்க .. வாழ்த்துக்கள் சுரேஷ்.. வாழ்த்துக்கள் காஞ்சனா"

"நன்றி இளமாறா "

(சுபம்)

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)