Monday, February 9, 2009

என்ன பயன்..?

அழகான உன்னை காணாவிடில்
என் கண்களால் என்ன பயன்

உன் சுவாசம் நுகர முடியாவிடில்
என் மூக்கால் என்ன பயன்

உன் பெயரை உசசரிக்க முடியாவிடில்
என் உதடுகளால் என்ன பயன்

நீ நடந்த பாதையில் நடக்காகவிடில்
என் கால்களால் என்ன பயன்

கனவில் உன்னை காணாவிடில்
என் இரவால் என்ன பயன்

உன் இதயம் சுமக்க முடியாவிடில்
என் உயிரால் என்ன பயன்

உன்னை காதலிக்க முடியாவிடில்
என் பிறவியால் என்ன பயன்

உன்னை அடைய முடியாவிடில்
என் ஆண்மையால் என்ன பயன்

மலரும் காதலை மனதிர்குள்ளே மூடிவிட்டால்
என் காதலால் என்ன பயன்

சொல்கின்ற காதல் மறுக்கப்பட்டால்
என் கவிதையாவது எனக்கு பயன்

ஆராதிக்கப்படாத உன் அழகால் என்ன பயன்...?

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)