Monday, February 9, 2009

ஆழியிலே முக்குளிக்கும் அழகே..

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும் கற்றாக உருமாறி
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா
உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி
எந்நாளும் சூடேறவா என் ஜென்மம் ஈடேறவா

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் விம்மென்ற கன்னத்தில்
விம்மென்ற நெஞ்சத்தில்
இச்சென்று இதழ் வைக்கவா
இச்சைக்கோர் விலை வைக்கவா

உன் உம் என்ற சொல்லுக்கும்
இம் என்ற சொல்லுக்கும்
இப்பொதே தடை வைக்கவா
மௌனத்தை குடி வைக்கவா

அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீதி
மறித்தாலும் மறக்காது அழகே
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனை போல இருக்காது அழகே
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனை போல இருக்காது அழகே


ஆழகே அழகே வியக்கும் அழகே
ஆழகே அழகே வியக்கும் அழகே

2 comments:

Anonymous said...

i corrected two mistakes in my blog from this song posted in your blog

மனுநீதி said...

I actually had to repeatedly listen this song atleast 10 times in an attempt to not make any mistakes which i found in many other websites that had this lyrics.

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)