Friday, February 13, 2009

சட்டென்று ஒரு காதல் - பகுதி 2

"ஆமா காஞ்சனா தான் பேசுறேன்.. ப்ரீயா இருக்கியா"

"ப்ரீயா தான் இருக்கிறேன் .. என்ன விஷயம் "

"ஏன் ஏதாவது விஷயம் இருந்தா தான போன் பண்ணனுமா"

"அதுக்கில்லே.. என்ன திடீர்னு"

"சும்மா பேசலாம்னு தானா கூப்டேன்.. தப்பா"

"இல்ல இல்ல.. பேசு பேசு"

"காலைல மீட் பண்ணத பத்தி என்ன நெனைக்கிற.. ஏதாவது யோசிச்சியா"

"ஒண்ணும் பெரிசா யோசிக்கில.. நீ எதாவது சொல்லனும்னு நெனைக்கிறியா"

"சரி நான் சுத்தி வளைச்சு பேசல.. எனக்கு உன்ன புடிச்சிருக்கு, உனக்கு என்னை பிடிச்சிருக்கா"

"பி..டி..ச்..சி..ரு..க்..கு... ஆனா "

"என்ன ஆனா"

"இந்த போன் கால்ல இந்த கேள்விய நான் எதிபார்க்கல"

"அப்ப என்ன நான்அவசரபடரேணு சொல்றியா"

"நாம அவசரபடுரோமோணு தோணுது"

"சரி நாம சும்மா பேசுவோம் பிடிச்ச கண்டினியு பண்ணுவோம்"

"சரி"

"உங்க வீட்ல எத்தனை பேரு..."

"நான் எங்க அம்மா அப்பா தங்கச்சி"
..........
............

...............


"நாம பேச ஆரம்பிச்சி மூணு மணி நேரம் ஆச்சு சுரேஷ்.. டைம் போனதே தெரில"

"ஆமா கரெக்ட் தான்.. "

"நாளைக்கு மீட் பண்ணுவோமா"

"சரி நான் காலைல போன் பண்றேன்"

இரண்டு வாரங்களுக்கு பிறகு ........

"நாம லவ் பண்ண ஆரம்பிச்சி இதோட ரெண்டு வாரம் ஆச்சு காஞ்சனா "

"ஆமா சுரேஷ் .. எங்க வீட்ல கல்யாணத்த பத்தி லேசா பேச்சு எடுக்க ஆரம்பிச்சிடாங்க"

"நாம ஏன் நம்ம வீட்ல இத பத்தி பேச கூடாது"

"ஒத்துபாங்களா?"

"ஒத்துபாங்கனு தான் நெனைக்கிறேன்.. நாம ரெண்டு பேருமே ஒரே காஸ்ட் வேற சோ பிரச்சனை ஒன்னும் இருக்காது"

"சரி நாளைக்கு பேசி பாப்போம்"

மறுநாள்..

"சுரேஷ் நான் வீட்ல சொன்னேன் ..ஒரே காஸ்ட்ணு சொன்னதால பெருசா
பிரச்சினை வரல.. உன்ன பத்தி டீடைல்ஸ் கேட்டாங்க"

"எங்க வீட்லயும் அதே தான் காஞ்சனா.. "

"இரு கேளு.. நான் டீடைல்ஸ் சொன்ன அப்புறம்.. உங்க அப்பா அம்மா கிட்ட பேசனும்ணு சொன்னாங்க"

"ஏய் இரு இரு.. அவசரப்பட வேண்டாம்.. கல்யாணம் எல்லாம் ஒரு வருசத்துக்கு அப்புறமா வச்சுக்கலாம்"

"என்னக்கும் அப்படி தான் தோனுது.. அவுங்க பேசினா கொஞ்சம் ஸாடிஸ்பைட்டா இருக்கும்னு நினைக்கிறாங்க போல"

"சரி எங்க அப்பா போன் நம்பர் மெசேஜ் பண்றேன் உங்க அப்பா கிட்ட குடு"

"சரி.."

"அது சரி இந்த சந்தோஷத்த எப்படி செலேபிரெட் பண்றது"

"புதுசா என்ன பண்ண போறோம்.. அதே காபி டே அப்புறம் படம் தான் "

செல்போன் சிணுங்கியது..

"இளமாறா ஒரு விஷயம் டா"

"டேய் கிறுக்கா.. மறுபடியும் ஏதாவது பொண்ணு விஷயமா"

"பொண்ணு விஷயம் தான் ஆனா வேற பொண்ணு இல்ல அதே பொண்ணு"

"என்னது...."

"ஆமா நாங்க லவ் பண்றோம்"

அடங்கொய்யால.. ஏன் கல்யாணத்துக்கு அப்புறம் சொல்ல வேண்டியது தான"

"கோவப்படாத டா .இப்ப அதுல ஒரு சிக்கல்"

"என்னது டா"

"அந்த பொண்ணோட அப்பா எங்க அப்பா கிட்ட பேசனும்னு நம்பர் வாங்கினாரு.. "

"சரி"

"நேத்து போன் பண்ணி பேசிருக்காரு. நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு
விஷயம் நடந்திருச்சுடா.. அவரு எங்க அப்பா கிட்ட.............. "

"எ..ன்..ன..டா... சொ..ல்..ர.. .. என்னால நம்பவே முடியல டா"


(தொடரும்)

2 comments:

Anonymous said...

அருமை , அடுத்த பகுதி எப்போ?!

மனுநீதி said...

//அருமை , அடுத்த பகுதி எப்போ?!//

மிக்க நன்றி ப்ரியன்

அடுத்த பகுதி நிறைவுப்பகுதி அத அநேகமா இன்னைக்கே எழுதிடுவேன்

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)