Thursday, February 19, 2009

உனக்காக நான் ....

உன் கடைக்கண் பார்வையில்
நான் காற்றில் பறக்கிறேன்

உன் மூச்சுகாற்றில்
நான் மூர்ச்சையாகிறேன்

உன் பாதச்சுவடில்
என் கால்கள் பதிக்கிறேன்

உன் வியர்வை துளிகளில்
நான் அமிர்தம் காண்கிறேன்

உன் கஞ்ச சிரிப்பினில்
என் உலகை மறக்கிறேன்

உன் உதட்டு சொற்களில்
நான் மொழிகள் கற்கிறேன்

உன் கூந்தல் வாசத்தில்
என் சுவாசம் தொலைக்கிறேன்

உன் கொலுசின் ஓசையில்
நான் இசையை உணர்கிறேன்

உன் கன்னக்குழியில்
நான் விழுந்து எழுகிறேன்

உன் கருவிழிகளில்
என் விடியலை மறக்கிறேன்

உன் மெல்லிடையில்
என் சிந்தனைகளை தொலைக்கிறேன்

உன் பெயரை கொண்டு
நான் கவிதைகள் எழுதுகிறேன்

உன்னை தொடர்ந்து
என் நிழலை அனுப்புகிறேன்

நான் தொடர
உன் காதலை அனுப்பிவை !!

2 comments:

KRTY said...

machi, super. !!

மனுநீதி said...

Thanks keerthi

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)