Sunday, December 27, 2009

மனச்சுவடு - 1

அதிவேகமாக கழிந்து கொண்டிருந்த தினங்கள் அன்று ஆசுவாசமாக கழிந்து கொண்டிருந்தது.

வழக்கத்திற்கு மாறாக என் அலுவலக சீட்டுக்கு அருகில் வந்து வெறும் ஹலோ அளவில் இருந்த நண்பர்கள் எல்லாம் ஆருயிர் தோழர்களாக மாறிகொண்டிருந்தார்கள். என் தொலைபேசியும் மறுஉயிர் பெற்று அலுவலகத்தின் எல்லா தளங்களில் இருந்தும் நலம் விசாரிப்புடன் என் சுற்று வட்டாரத்தை பற்றியும் விசாரிப்பு தொடர்ந்தது.

அத்தனை நேரம் கேள்விகளை மட்டும் மனதிற்குள் ஓட்டி கொண்டிருந்த எனக்கு விடை அவள் எழுந்து நிற்கும் போது கிடைத்தது.

இத்தனை காலங்கள் போராடி பிரம்மன் இப்போது தான் தன் பணியை சரிவர செய்து இருக்கிறான். நளினமான நடை, பார்க்கும் அனைவரையும் வசீகரிக்கும் புன்னகை , எவரையும் சட்டை செயாத அந்த மிடுக்கு அத்தனையும் அவளை மேலும் அழகாக காட்டியது. அதுவரை அழகென்று பெருமை கொண்ட பெண்களை எல்லாம் தொலை தூரத்தில் ஒரே நாளில் தொலைய செய்தாள்.

அவள் வந்த ஒரே நாளில் அலுவலகத்தில் அணைத்து ஆடவர் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்தது , ஆனால் வழக்கம் போல அந்த பரபரப்பு ஒரு வாரத்தில் ஒரு நான்கைந்து பேரிடத்தில் மட்டும் விடாப்பிடியாக ஒட்டி கொண்டு மற்றவரிடத்தில் காற்றில் கரைந்து விட்டது. அடுத்த சில வாரங்களில் இவளை பற்றிய பேச்சுக்கள் அறவே குறைந்து போயின. ஆனால் இப்போது நான் என்னுடன் தினமும் பேச துவங்கியிருந்தேன் .

இரவுகள் நீளமாகி கொண்டிருந்தன. கவிதைகள் குவியதொடங்கின. கற்பனையில் நிறைவேற சாத்தியமில்லாத விடயங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன . அலுவலகத்தில் இல்லாத நேரங்கள் அலுவலகத்தை தேடின. அலுவலகத்தில் அவள் இல்லாத நாட்கள் அவளை தேடின. கண் எதிரில் தேவதை கற்பனைக்கா பஞ்சம், கவிதைகளால் கவிதையை தினமும் தினமும் துதி பாடி கொண்டிருந்தேன்.

அனைவருக்கும் பிடித்த கவிதை அவளுக்கு பிடித்திருக்கவில்லை போலும். நான் சொல்லாமல் அவளே உணரும் அந்த கற்பனை வட்டத்தில் சிக்கி கொண்டே நிஜத்தில் சிந்தித்து கொண்டிருந்தேன். நிஜம் விளங்க நாழியானது. நிஜம் உணர்ந்த போது நாட்கள் வேகமாக கழிந்து கொண்டிருந்தது. என் வார்த்தைகளுக்கு முட்டுகட்டையாய் கேள்விகளை நானே கேட்டுகொண்டிருந்தேன். கேள்விகள் தொலைந்த போது தைரியமும் தொலைந்து போயிருந்தது. முடிவில் எதிர்பார்த்தது எதிர்பாராமல் நிகழ்ந்தது.

(தொடரும்)

Saturday, December 19, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 6 (நிறைவுப் பகுதி)


ராம் சங்கரை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை .

"என்ன ராம் எல்லாம் படிச்சு உண்மையெல்லாம் தெரிஞ்ச மாதிரி இருக்கா?" சங்கரின் தொனி ராமை எரிச்சலூட்டியது .

"சங்கர் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. நடந்த கொலைகளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். இத்தனை நாளஉங்களுக்காக வேலை செஞ்ச என்னை கூட நம்பாம எல்லாத்தயும் எதுக்கு மறைச்சீங்க "

"பொறுமையா இரு ராம். மொத்தமா எல்லாத்தையும் சொல்லலாம்னு தான் இவளோ நாள் காத்திட்டு இருந்தேன். நீ ஆரம்பத்துலையே சொன்ன
மாதிரி இளமாறன் அவளோ நல்லவன் இல்ல. அது எனக்கும் தோணுச்சு, இருந்தாலும் அவன் என்ன தான் பண்ணப்போறான்னு பாக்க
ஒரு ஆர்வம். நம்ம கிட்ட அவன் கொடுத்த ஹிட்லிஸ்ட் மட்டும் தான் நிஜம், மத்தபடிக்கு அந்த துப்பாக்கி தொலைஞ்சு போனதெல்லாம்
கதை"

"என்ன பாஸ் சொல்றீங்க. அப்ப அந்த துப்பாக்கி நம்ம ஆபீஸ்குள்ள வந்ததுக்கும் அவன் தான் காரணமா"

"சந்தேகமே இல்லாம அவன் தான் காரணம். அது மட்டும் இல்ல அந்த ஹிட்லிஸ்ட் தயாரிச்சதே அவன் தான். அத வச்சு ஒரு பெரிய திட்டம்
போட்டிருந்தான். அந்த லிஸ்ட்ல இருக்கவங்க கிட்ட பேர தூக்குறதுக்கு பணம் தரணும்னு ப்ளாக்மெயில் பண்றதுக்கு பிளான். முதல் நாலு பேரு ஒத்து வரல, உடனே அவனே மத்தவங்களுக்கு பயம் வரணும்னு அவுங்கள க்ளோஸ் பண்ணிட்டான் "

"ஒ மை காட்.. என்னால நம்பவே முடியல . "

"அதுக்கப்புறம் தான் அவன் ஒரு திட்டம் போட்டு என்ன சிக்க வைக்க பார்த்தான். முதல் நாலு கொளைகல்ல நம்மல மாட்டி விட்டு மத்தவங்க கிட்ட பணம் வாங்கிட்டு ஹிட்லிஸ்ட மறைக்க திட்டம் போட்டான். மத்தவங்களும் அவன் கிட்ட பணத்த கொடுத்துட்டாங்க "

"ஆனா மத்தவங்களும் செத்துட்டாங்களே சங்கர்"

சங்கர் மெளனமாக ஒரு புன்னகை மட்டும் உதிர்த்தான். ராம் மீண்டும் வியர்க்க தொடங்கியிருந்தான்.

"ராம் மத்த கொலைகள் நடந்தது ஹிட்லிஸ்ட் கணக்க முடிக்க தான் ஆனா செஞ்சது இளமாறன் இல்ல" சங்கரின் சிரிப்பு சப்தம் அதிகமாகி கொண்டிருந்தது.

சங்கர் தொடர்ந்தான் "நீ அடுத்து என்ன கேக்க போறேன்னு எனக்கு தெரியும். மத்த கொளைகல செஞ்சது நானானு தான. அதுக்கு பதில் நானும் தான்"


ராம் தெளிவாக குழம்பியிருந்தான். ஆனால் வார்த்தைகளை உதிர்க்க திராணியில்லாமல் சங்கர் தொடர முகத்தை ஏறிட்டான்.

"ராம் மத்த கொளைகல செஞ்சது இளமாறனுக்கு ஒரு பயத்த உண்டு பண்ண , தவிர அவுங்க எல்லாரும் எப்படியும் சாக வேண்டியவங்க தான். சட்டத்து நால அவங்க கிட்ட கூட நெருங்க முடியாது. அதனால செஞ்ச கொளைகல்ல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. சாந்தாராம் துக்காராம் ரெண்டு பேரையும் கொலை பண்றதுக்கு முன்னால இளமாறன் போன் பண்ணி வர சொன்னான். அவனுக்கு நான் தான் இத பண்றேன்னு கண்டுபிடிக்கிறது ஒண்ணும் கஷ்டம் இல்ல ஆனா எங்க அவர் மாட்டிபாரோனு ஒரு பயம் வந்திடுச்சு. பணம் கொடுத்தவன்
எல்லாம் கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டானுங்க. அதனால இந்த பிரச்சனைல இருந்து அவர வெளில கொண்டு வர, அப்புறம் அவர் செஞ்ச பாவத்துக்கு அவர ..."

"கொலை பண்ணிடீங்களா சங்கர்"

"இல்ல தற்கொலை பண்ணிக்க வச்சிட்டேன்"

"சங்கர் நீங்க எவளோ நியாயம் சொன்னாலும் நீங்க செஞ்சது தப்பு தான். நான் இத போலீஸ்ல சொல்ல தான் போறேன் "

"தாரளமா சொல்லிக்கோ ராம். ஆனா கம்பி என்ன போறது நீயும் தான். ரெட்டை கொலைகள் எப்படி கிட்ட தட்ட ஒரே நேரத்துல நடந்துச்சுன்னு சொல்லனுமா "

"என்ன சொல்றீங்க சங்கர்"

"ரெண்டு கொலையையும் செஞ்சது ஒருத்தன் இல்ல . ரெண்டு பேர். ஒண்ணு நீ இன்னொன்னு நான் "

காற்று ராமின் நாசிகளில் அவசரகதியில் நுழைந்து வெளியேறி கொண்டிருந்தது .

"ஹிப்நாட்டிசம் பத்தி படிச்சியே ராம் அதுல செலக்டிவ் மெமரி எரேசிங் டெக்னிக் பத்தி பாத்தியா. நடந்த நிகழ்வுகல ஒருத்தர் மனசுல இருந்து தடயமே இல்லாம அழிக்கவும் முடியும் அதே மாதிரி நடக்காத ஒரு விஷயத்த நடந்த மாதிரி ஒருத்தர் மனசுல புகுத்தவும் முடியும். அதனால நீ கொளைகல பண்ணினது உனக்கு நிச்சயமா நினைவுல இருக்காது .இப்ப நம்ம பேசிட்டு இருந்தத கூட உன் நினைவுல இருந்த என்னால சுத்தமா அப்புறபடுத்த முடியும். அப்புறம் இளமாறன் மனசுக்குல தற்கொலை பணிகனும்ன்ற எண்ணத்த புகுத்தினேன் வேலை சுலபமா
முடிஞ்சுது. சாந்தாராம் துக்காராம் விஷயத்துல அவுங்க கிட்ட நெருங்கறது ரொம்ப கஷ்டமா இருந்ததுனால அவுங்களே ஒருத்தர் கார்ல இன்னொருத்தர் பாம் வச்சதா செட் பண்ணி ஒருத்தர் சாக இன்னொருத்தர் ஜெயில் போக பிளான் பண்ணிட்டேன். குடும்ப சண்டை காரணம்னு ஆனதுனால அவளோ சீக்கிரம் வெளில வர முடியாது. இப்போ எல்லாம் புரிஞ்சுதா ராம். என்ன முடிவு எடுத்திருக்க "

ராம் சற்று தெளிந்திருந்தான். " பாஸ் இப்ப நடந்தத என் மனசுல இருந்து எரேஸ் பண்ணிடுங்க. அடுத்ததடவை தயவு செஞ்சு என்கிட்டே முன்கூட்டியே சொல்லிடுங்க"

சங்கர் சிரித்தான் அதில் மன திருப்தியுடன் ஒரு திட்டத்தை தயார் செய்து நடத்தி காட்டிய வெற்றி தெரிந்தது.


(முற்றும்)

Saturday, December 5, 2009

அதே நேரம் அதே இடம் - முதல் முறை உன்னை பார்த்த போதே (Lyrics)

படம்: அதே நேரம் அதே இடம்
இசை: பிரேம்ஜி அமரன்
பாடியவர்கள் : ஹரிச்சரன், திப்பு, ஹரிணி
பாடலாசிரியர் : லலிதானந்த்
பாடலுக்கான சுட்டி:
முதல் முறை உன்னை பார்த்த போதே


முதல் முறை உன்னை பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே

கனவினில் உன்னை பார்க்கும் போதும்
அருகினில் என்னை காண வேண்டும்
உன் அருகே நான் இருந்தால் சிலிர்க்கிறதே

நீ விளையாட்டு பிள்ளை
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை
என்னை தாயை போலே தாங்க வேண்டும் மடியினிலே

முதல் முறை உன்னை பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே

நீ அருகில் தோன்றும் நேரமே
வான் நிலையும் மாறி போகுதே
நீயும் நினைத்தால் வானவில்
வந்து விடுமே

உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் போல வேண்டுமே
உன்னை நினைத்தால் வாழ்விலே
என்றும் சுகமே

உன்னுடன் இருப்பதால்
உயிருடன் இருக்கிறேன்
உனக்கென்ன வேண்டுமா
உயிரையும் தருகிறேன்

நான் உன் மூச்சில் வாழ்வேன்
வரம் அது எந்நாளும் போதும்
நீ சூடும் பூவும் வாடும் போது
வலித்திடுமே

முதல் முறை உன்னை பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே

நீ நடந்தும் போகும் வேலையில்
கால் வலிக்கும் என்றும் கலங்குவேன்
தோளில் சுமந்தே தாங்குவேன்
உன்னை தினமே

தோளிரண்டில் என்னை தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்
நானும் உனையே தாங்குவேன்
நெஞ்சில் தினமே

சூரியன் உதிப்பதே
உன்முகம் காணவே
பூமியில் பிறந்ததே
உன்னுடன் வாழவே

அது மழை மேகம் யாவும்
இறங்கியே உனை தீண்டி ஏங்கும்
இனி கோயில் தேடி போக மாட்டேன்
தெய்வமும் நீ

முதல் முறை உன்னை பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே