Wednesday, January 28, 2009

நூறாவது முறையாய்....

நான் விழித்ததும் நீ காபிகொண்டு வரும்போது உன்னை இருக்க கட்டி கொண்டு அந்த சப்தமில்லாத முத்தம் உன் சிணுங்கல்

தலை துவட்ட நான் துண்டு கேட்கும் போது
மறுபடியும் நாம் குளித்த நாட்கள்

பணிக்கு செல்ல மனமில்லாமல் நிற்கும் எனக்கு நீ முத்தம் தந்து வழி அனுப்பும் அந்த நேரம்

மனம் வீட்டிலும் உடல் பணியிலும் மாலைக்காக நான் ஏங்கும் அந்த பணியிட நாட்கள்

இத்தனை அழகா என நான் தினமும் வியக்க என்னை வரவேற்கும் உன் புன்சிரிப்பு

உன் முகம் என்ன மாயகண்ணாடியா?
பார்த்தவுடன் என் கவலைகள் மறைந்து போகின்றன.

நம் ஊடலுக்கு சான்றாக நம் குட்டி தேவதை
ஆம்... உன்னை விட அழகாய்!!

நான் உனக்காகவும் நீ எனக்காகவும் விட்டு கொடுத்து வாழ்ந்த அந்த வாழ்க்கை..

ஒவ்வொரு நாட்களும் தேன்.

சூரிய ஒளி கண்ணில் பட விழித்தேன்.

இந்த கனவு நினைவாக இன்றாவது காதலை சொல்லி விட வேண்டும்..

தைரியமின்றி சபதமெடுத்தேன். நூறாவது முறையாய்....

Friday, January 23, 2009

முக்தி

தோட்டத்து ரோஜாக்கள் உன்னை
புன்னகைத்து வரவேற்கின்றன
உன் கூந்தலில் முக்தியடைய..

சாலை மரங்களெல்லாம்
பூக்களை உதிற்கின்றன
உன் காலடியில் முக்தியடைய..

வண்டுகள் தேன் குடிக்க
உன்னை நோக்கி படையெடுக்கின்றன
உன் உதடுகளில் முக்தியடைய...

பல இதயங்கள்
காதலுக்காக காத்துக்கிடகின்றன
உன் பதிலில் முக்தியடைய...

இதுவரை பிறக்காத என் வார்த்தைகளின் ஒரு பகுதி
நீ படிக்காத இந்த கவிதையில்
முக்தியடைகின்றன....