Sunday, December 14, 2008

Air Supply - Every woman in this world





Over night scenes, dinner and wine
Saturday girls
I was never in love, never had the time
In my hustle and hurry world
Laughing myself to sleep, waking up lonely
I needed someone to hold me, oh

Its such a crazy old town, it can drag you down
Till you run out of dreams
So you party all night to the music and lights
But you dont know what happiness means
I was dancin in the dark with strangers
No love around me, when suddenly you found me, oh

(chorus) girl youre every woman in the world to me
Youre my fantasy, youre my reality
Girl youre every woman in the world to me
Youre everything I need
Youre everything to me, oh girl

Everything good, everything fine
Thats what you are
So put your hand in mine and together
We'll climb as high as the highest star
Im living a lifetime in every minute that were together
And Im stayin right here forever oh
(repeat chorus)

Lyrics of Naane Tholaintha kadhai - Thavamai Thavamirundhu

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே
காதல் நுழைந்த வழி கண்டறிவாய் காதலியே

விண்ணில் மழை துளிகள் மின்னலாய் நின்றுவிட
மண்ணில் எனது நிழல் உன்னைப்போல மாறி விட
விரலோரம் கவிதை ஊறியதே
விழியோரம் காதல் கசிகிறதே
நதி மேலே ஓற்றை காலில் மழை ஆடும் ஆனந்தமாய்
கனவு ஊறும் மனசுக்குள்ளே 
காதல் வந்து ஓற்றை காலில் சுற்றி சுற்றி மூழ்கடிக்குதே

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே

உன் இதயம் நான் படிக்க கள்வனாய் மாறி வந்தேன்
என்னைப் போல நீயும் ஓரு கள்ளி என கண்டு கொண்டேன்
என் விரலை உன் விரலால் இரவினில் தீண்டுகிறேன்
முத்தமென்று தண்ணீரை முகத்தினில் ஊற்றுகிறேன்
உன் முகம் தேடி காலையில் வெயிலாகிறேன்
உன் குரல் தேடி சாலையில் குயிலாகிறேன்

தேர்வு அறை முழுதும் தேவதையே உன் நினைவு
நாளை விடுமுறையாம் காதல் வதை உன் பிரிவு

கண்கள் எனை மறந்து உன்னையே தேடியது
சுவாசம் உன் பெயரை என்னுள்ளே பாடியது
லேசாக சண்டை போடவா
பேசாமல் முத்தம் கேட்கவா
வெயில் காயும் சாலையிலே மழை தூவும் ஆனந்தமாய்
தனிமை நீங்கும் வேளையிலே 
காதல் நம்மை காற்றைப் போல எங்கோ எங்கோ கொண்டு செல்லுதே....

Wednesday, December 10, 2008

**தடுமாறும் நினைவுகள்** - பகுதி 5

அன்று இரவு முழுவதும் கண்கள் மூடி விழித்து கொண்டிருந்தேன்.

நடந்ததை மனதிற்குள் எத்தனை முறை ஓட்டி பார்த்தாலும் வினாக்கள் மட்டுமெ விடையாய் வெளிப்பட்டன.

சில நாட்களுக்கு பிறகு.


சாட்டில் அவள் வந்தாள். என்ன ஆனாலும் சரி மனதில் உள்ளதை கொட்டி என் நிலையை தெளிவுபடுத்த வேண்டுமென என் மனம் கூறியது.


கொட்டினேன்.


அவள் அதை பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை என எனக்கு விளங்கியது.


அவள்: நான் இன்னொரு பையனை காதலிக்கிறேன்.


(இது என் வீட்டுற்கருகில் இருக்கும் மற்றொரு தோழி மூலம் முன்பே தெரிந்திருந்தாலும் இப்பொழுது ஏன் சொல்கிராள் என புரியவில்லை. ஓன்று மட்டும் நிச்சயம் அவள் என் 'ஈர்ப்பு' கூற்றை நம்பவில்லை.. 'காதல்' என்றே நினைத்து இதை கூறியிருக்கிறாள்.)


நான்: இதை ஏன் நீ முன்னாடியே சொல்லல

அவள்: நான் இதை ஏன் உன்கிட்ட சொல்லனும்.

நான்: நாம நண்பர்கள் தான அப்ப இதை சொல்லி இருக்கலாமே.

அவள்: You are just someone I know. That's all.

நான்: சரி.

அவள்: I am leaving. bye.

நான்: ok bye.



நான் அவளிடம் பேசிய கடைசி வார்த்தை.


பிரிவு சோகமானது என்பதை பொய்யாக்கியது இந்த உரையாடல். நீண்ட நாட்களுக்கு பிறகு என் மனம் கொஞ்சம் லேசானது. அவளுக்கு புரிந்ததோ இல்லையோ என்னுடைய நியாயத்தை நான் கூறிவிட்டேன். நிரபராதிகளும் சில சமயம் தண்டிக்க படுவார்கள் தானே!!


மறுநாள்..


நானும் என் வீட்டுற்கருகில் இருக்கும் தோழியும் சாட் செய்து கொண்டிருந்தோம். நடந்தவற்றை நான் கூறினேன். அவள் உடனே தான் தான் இந்த விஷயத்தை 'அவளிடம்' கூறியதாக சொன்னாள். ஏற்கனவே முடிந்த விஷயம் என்பதால் நான் அதற்கு மேல் ஏதும் விவாதிக்கவில்லை. ஆனால் இந்த சின்ன விஷயம் எவ்வளவு பிரச்சனைகளுக்கு காரணம் ஆகிவிட்டது என்று வருந்தினேன்.


நான் கற்று கொண்ட பாடம்: பெண்களிடம் எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்ல வேண்டும். எதை சொல்ல கூடாதோ அதை எக்காரணத்தை கொண்டும் சொல்ல கூடாது.


மற்றவர்களுக்கு: CRUSH என்பதற்கு காதல் என்று அர்த்தம் இல்லை.


பின்குறிப்பு: என் முதல் எழுத்து முயற்சி இது. தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும். திருத்திக்கொள்கிறேன்.



(முற்றும்)

Sunday, December 7, 2008

Ninnai Charanadainthen lyrics - நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென..

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்