Friday, November 21, 2008

Lyrics of Nenjukkul Peidhidum Maamazhai

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன் வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஓ சாந்தி சாந்தி ஒ சாந்தி
என் உயிரை உயிரை நீயேந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

சரணம் 1
ஏதொ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா

நீ நின்ற இடம் என்றால் விலை ஏறி போகாதோ
நீ செல்லும் வழி எல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னாள் நெஞ்சே போகாதே


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை


நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன் வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

சரணம் 2

தூக்கங்ளை தூக்கி சென்றாய்
ஏக்கங்களை தூவி சென்றாய்
உன்னை தாண்டி போகும்போது
வீசும் காற்றின் வீச்சு வேறு


நில் என்று நீ சொன்னால் என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்க வில்லை
கேட்காதது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே


Female Harmony :

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன் வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை


ஓ சாந்தி சாந்தி ஒ சாந்தி
என் உயிரை உயிரை நீயேந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

Friday, November 7, 2008

**தடுமாறும் நினைவுகள்** - பகுதி 4

கல்லூரி விடுமுறை நாட்கள்..


அவ்வப்பொழுது புத்தகத்தை படித்து கொண்டு முழுக்க முழுக்க தொலைக்காட்சியில் புதைந்த காலம்.


வழக்கம் போல் இரவில் கணினியில் அமர்ந்திருந்தேன். அடுத்து நான் செய்தது இன்றும் ஏன் செய்தோம் என்று வருந்தும் காரியம்.

'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் அரிது பெண்களின் மனதை புரிந்து கொள்வது' - நானே என்னை சாட்டையால் மனதில் அடித்து கூறிய வாக்கியம்.


என் வீட்டுற்கருகில் இருந்த மற்றொரு கல்லூரி தோழிக்கு சாட் தகவல் அனுப்பினேன். "எனக்கு 'அந்த' பெண்ணின் மீது ஒரு ஈர்ப்பு உள்ளது"


ஈர்ப்பு என்பதற்கு காதல் என்றா அர்த்தம்? (இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் நான் ஏன் ஈர்ப்பு என்ற வார்த்தையை உபயோகித்திருக்கின்றேன் என்று)
பாவம் அவள் அப்படி தான் புரிந்து கொண்டாள். ஆனால் நான் அதை விட பாவம் அவள் அப்படி புரிந்து கொண்டதை நான் புரிந்து கொள்ளவில்லை.


சில வாரங்களுக்கு பிறகு..


கல்லூரி தேர்வுகள் முடிந்து வகுப்புகள் துவங்கி ஒரு வாரம் இருக்கும்.
அன்று ரக்க்ஷா பந்தன்.. பேருந்தை விட்டு நான் இறங்கி நடந்து கொண்டு இருந்தேன். 'அவள்' கையில் ராக்கி.. நில் என்றாள். நின்றேன். கையை நீட்டு என்றாள். நீட்டினேன்.. ராக்கியை கட்டினாள். அந்த நொடியில் என் மனம் தற்கொலை செய்து கொண்டது..

என் 'ஈர்ப்பின்' மேல் உள்ள வெறுப்பால் அல்ல.. அவள் என்னை தவறாக நினைத்து தவிர்க்க முடியாத தருணம் வரக்கூடாதென்று முன்னெச்செரிக்கையாய் இதை செய்கிறாள் என்பதால்..
ஒரு யுத்தம் மனதிற்குள் நடந்து கொண்டிருக்க அமைதியாய் சிரித்து விட்டு நடந்து சென்றேன். இன்று வாழ்க்கையில் மிக சோகமான நாள். என் நேர்மை சோதிக்கப்பட்ட நாள்.


இவள் இப்படி நினைக்க யார் காரணம்?

குழப்பங்கள் மட்டுமே விடையாய் வெளிப்பட உண்மையான விடை தெரியாமல் விடியல் விலகும்  நேரத்தில் நடந்து கொண்டிருந்தேன் வீட்டை நோக்கி...


நினைவுகள் தொடரும்... (அடுத்த பகுதியில் முடியும்)