Wednesday, December 10, 2008

**தடுமாறும் நினைவுகள்** - பகுதி 5

அன்று இரவு முழுவதும் கண்கள் மூடி விழித்து கொண்டிருந்தேன்.

நடந்ததை மனதிற்குள் எத்தனை முறை ஓட்டி பார்த்தாலும் வினாக்கள் மட்டுமெ விடையாய் வெளிப்பட்டன.

சில நாட்களுக்கு பிறகு.


சாட்டில் அவள் வந்தாள். என்ன ஆனாலும் சரி மனதில் உள்ளதை கொட்டி என் நிலையை தெளிவுபடுத்த வேண்டுமென என் மனம் கூறியது.


கொட்டினேன்.


அவள் அதை பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை என எனக்கு விளங்கியது.


அவள்: நான் இன்னொரு பையனை காதலிக்கிறேன்.


(இது என் வீட்டுற்கருகில் இருக்கும் மற்றொரு தோழி மூலம் முன்பே தெரிந்திருந்தாலும் இப்பொழுது ஏன் சொல்கிராள் என புரியவில்லை. ஓன்று மட்டும் நிச்சயம் அவள் என் 'ஈர்ப்பு' கூற்றை நம்பவில்லை.. 'காதல்' என்றே நினைத்து இதை கூறியிருக்கிறாள்.)


நான்: இதை ஏன் நீ முன்னாடியே சொல்லல

அவள்: நான் இதை ஏன் உன்கிட்ட சொல்லனும்.

நான்: நாம நண்பர்கள் தான அப்ப இதை சொல்லி இருக்கலாமே.

அவள்: You are just someone I know. That's all.

நான்: சரி.

அவள்: I am leaving. bye.

நான்: ok bye.



நான் அவளிடம் பேசிய கடைசி வார்த்தை.


பிரிவு சோகமானது என்பதை பொய்யாக்கியது இந்த உரையாடல். நீண்ட நாட்களுக்கு பிறகு என் மனம் கொஞ்சம் லேசானது. அவளுக்கு புரிந்ததோ இல்லையோ என்னுடைய நியாயத்தை நான் கூறிவிட்டேன். நிரபராதிகளும் சில சமயம் தண்டிக்க படுவார்கள் தானே!!


மறுநாள்..


நானும் என் வீட்டுற்கருகில் இருக்கும் தோழியும் சாட் செய்து கொண்டிருந்தோம். நடந்தவற்றை நான் கூறினேன். அவள் உடனே தான் தான் இந்த விஷயத்தை 'அவளிடம்' கூறியதாக சொன்னாள். ஏற்கனவே முடிந்த விஷயம் என்பதால் நான் அதற்கு மேல் ஏதும் விவாதிக்கவில்லை. ஆனால் இந்த சின்ன விஷயம் எவ்வளவு பிரச்சனைகளுக்கு காரணம் ஆகிவிட்டது என்று வருந்தினேன்.


நான் கற்று கொண்ட பாடம்: பெண்களிடம் எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்ல வேண்டும். எதை சொல்ல கூடாதோ அதை எக்காரணத்தை கொண்டும் சொல்ல கூடாது.


மற்றவர்களுக்கு: CRUSH என்பதற்கு காதல் என்று அர்த்தம் இல்லை.


பின்குறிப்பு: என் முதல் எழுத்து முயற்சி இது. தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும். திருத்திக்கொள்கிறேன்.



(முற்றும்)

1 comments:

Raghu said...

hey...good da...nalla ezhuthu nadai...never knew u can write in tamil so fluently...so keep going...

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)