Friday, January 23, 2009

முக்தி

தோட்டத்து ரோஜாக்கள் உன்னை
புன்னகைத்து வரவேற்கின்றன
உன் கூந்தலில் முக்தியடைய..

சாலை மரங்களெல்லாம்
பூக்களை உதிற்கின்றன
உன் காலடியில் முக்தியடைய..

வண்டுகள் தேன் குடிக்க
உன்னை நோக்கி படையெடுக்கின்றன
உன் உதடுகளில் முக்தியடைய...

பல இதயங்கள்
காதலுக்காக காத்துக்கிடகின்றன
உன் பதிலில் முக்தியடைய...

இதுவரை பிறக்காத என் வார்த்தைகளின் ஒரு பகுதி
நீ படிக்காத இந்த கவிதையில்
முக்தியடைகின்றன....

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)