Wednesday, February 7, 2007

பட்டினி

குமுதத்தில் படித்தது....




அவரவர் அரிசியில் அவரவர் பெயரை

ஆண்டவன் எழுதியிருப்பான்..

என் அரிசியை மட்டும் ஏனோ

ஒளித்து வைத்துவிட்டான்.




ஏனோ தெரியவில்லை இதை படித்த பின் என் மனம் சற்று கனமானது.


Tuesday, January 2, 2007

**தடுமாறும் நினைவுகள்** - பகுதி 2

என் உறங்கா இரவுகள் வேகமாய் கழிந்து கொண்டிருக்க ..என்னுள் வச்ந்தம் இதமாய் வீச தொடங்கியது.

அன்று டிசம்பர் 31 ..என் வீட்டிற்கும் என் வீட்டிற்கருகில் இருக்கும் எனது காலேஜ் தோழியின் வீட்டிற்கும் சில காலேஜ் நண்பர்கள் வந்திருந்தார்கள்..சொல்ல மறந்துவிட்டேன் என்னவளின் வீடும் என் வீட்டின் பக்கதில் தான் இருக்கின்றது..அதனால் அவளும் வந்து இருந்தாள்... அன்று அவள் மெருன் நிற சல்வார் அணிந்திருந்தாள்...அன்று மறக்க முடியாத நாள்..

அன்று சாயங்காலம் எல்லரையும் பஸ் ஸ்டாப்பில் டிராப் செய்து விட்டு வரும் வழியில் அவ்ளையும் அவள் வீட்டின் அருகே டிராப் செய்தேன்..அப்போது அவள் என்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னாள்..அந்த நொடி என் உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது..அடுத்து அவள் என்ன சொல்ல போகிறாள் என்று நொடிப்பொழுதில் நூறு முறை என் மனம் கேள்விகணைகளை தொடுததது.....

இன்று முடிவு தெரிந்து விடும் என்று எதிபார்த்த எனக்கு அன்று குழப்பமே மிஞ்சியது...

"நான் அப்புறமா உன்கிட்ட சொல்றென்" என்று சொன்னாள். என் உள்ள போர்களத்தில் போர்கள் நடப்பதில் அப்படி என்ன அவளுக்கு சந்தோஷம் என்று எனக்கு விளங்கவில்லை..

குழப்பதுடன் நான் நின்று கொண்டிருக்க சற்று தூரம் நடந்து சென்ற பின் அவள் திரும்பி " புத்தாண்டிற்கு எங்காவது வெளியில் செல்கிறாயா" என்று கேட்டாள்..நான் இல்லை என்றென்..."நம்ம இரண்டு பேரும் எங்காவது வெளியில் செல்வோம்" என்றாள்..

குழப்பத்தின் உச்சியில் நான் நின்று கொண்டு ..சரி என்றேன்..அப்பாவியாய். அடுத்த சில நாட்களில் நடக்க போகும் பயஙரங்களை அறியாமல்...


---- நினைவுகள் தொடரும்

Friday, December 8, 2006

**தடுமாறும் நினைவுகள்** - பகுதி 1


உன்னை முதலில் பார்த்த போது எந்த விதமான ஈர்ப்பும் வரவில்லை..உண்மையில் சொல்ல போனால் முதல் மூன்று வருடத்தில் மிக சகஜமாக தான் பழகினேன்..

பின் ஏன் திடீரென்று ஒரு விதமான தடுமாற்றம் என் மனதில்..

அந்த ஒரு மாலை நேரம்..அத்தனை நாள் நண்பியாய் இருந்த நீ அன்று மட்டும் ஏன் எனக்கு தேவதையாய் தோன்றினாய்...

அந்த மஞ்சள் மின் விளக்கிற்கு கீழே நீ நடந்து வந்த போது..என் மனதிற்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது..

அன்று நான் உற்ங்க வெகு நெரம் ஆனது.. அதன் பிறகு என் இரவுகள் உன் நினைவுகளால் வெகு நெரம் விழித்திருக்க தொடங்கியது..

உறங்காமல் விழித்திருப்பதும் சுகம் தான் உன் நினைவுகளில் நீந்திக்கொண்டிருக்கும் வரை...............



---- நினைவுகள் தொடரும்

காதலுடன்....

என்னவளே....

என்னுள் மாற்றங்கள் ஏற்பட செய்தாய்

பின் என்னுள் ஏக்கங்கள் தோன்றிட செய்தாய்

என் ஏக்கங்கள் காதலாய் மாறும்போது

அது மட்டும் வேண்டாம் நண்பர்களாகவே இருப்போம் என்றாய்...

ஆம் இன்று நாம் இருவரும் இணை பிர்யாத நண்பர்கள்.....

என் மனதில் காதலொடும் உன் மனதில் நட்போடும்...