Tuesday, March 3, 2009

காதலி துதி

அழகு தேவதை உன்னை பாட
வார்த்தை இன்றி நானும் வாட
உன் முத்துச்சிரிப்பினில் மின்னல் தெறிக்க
ஒவ்வொரு முறையும் என் இதயம் மறிக்க
உன் பவள உதடுகள் சொற்கள் உதிர்க்க
அதை அள்ளி திருட என் உள்ளம் துடிக்க
இச்சை தீர கட்டி தழுவ
கச்சை கட்டி அலையும் மனது

பிரம்மன் செய்த அழகு சிலை நீ
ரவிவர்மன் வரைந்த அற்புத கலை நீ
உன் நிழலை கேட்டுப்பார் சொல்லும்
சத்தம் இல்லாமல் ஒரு முத்தம்
நான் தந்து செல்வதை நித்தம்
சொர்க்கம் அது பக்கம் தான்
அது உன்னிடத்தில் மட்டும் தான்



உன்னை வழிபடும் கூட்டம் அறிந்தான்
கடவுள் கூட வெட்கி குனிந்தான்
பூவுக்கே பூக்கள் தூவும்
அந்த சாலையோர மஞ்சள் மரம்
மீன்களெல்லாம் தரைக்கு வந்து சாகும்
உன் கண்களை காண ஏங்கும்
பூமிக்கு தவறி வந்த மங்கை
நீ நிச்சயம் தேவலோக ரம்பை

நட்சத்திர பூக்கள் தவிக்கிறது
உன் கூந்தலை அடைய துடிக்கிறது
உன்னை பாடாத கவிஞர்கள்
அவர் கவிகளுக்குள் வீணர்கள்
உன் அழகை பாட ஏங்கும் நெஞ்சம்
தமிழிலில் சொற்களுக்கோ பஞ்சம்
நீ கோவிலுக்கு செல்வதில்லை
கடவுள் கடவுளை வணங்குவதில்லை

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)