Monday, July 13, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 2


"ராம் நான் ஏ.சி. பி இளமாறன பாக்க போறேன். நம்ம படிச்ச அந்த ரெட்டை கொலை விஷயமா பேசணுமாம். நீயும் வரியா" புறப்பட்டு கொண்டே கேட்ட சங்கரின் கேள்விக்கு எப்போதும் துடுக்காக இருக்கும் ராமிடம் சிறிது நேரத்திற்கு எந்த பதிலும் இல்லை.

"உன்ன தான் ராம் கேக்றேன். என்ன ஏதோ யோசனையில் இருக்க போல" மீண்டும் சங்கர் கேட்டபோது அரைமனதுடன் ராம் தலையசைத்து புறப்பட்டான்.

போகும் வழியெல்லாம் சங்கரின் மனது கொலை நடந்த நிகழ்வுகளை தொடர்பு படுத்தி துப்பை தேடி கொண்டிருந்தது.ராம் மௌனமாகவே வந்தான்.

"ஏன் ராம் ரொம்ப ஸைலன்டா இருக்க"

"இல்ல இந்த கேஸ நாம அவசியம் எடுத்துகணுமா? எனகென்னவோ முன்னாடி மாட்டின மாதிரி இளமாறன் மறுபடியும் ஏதாவது சிக்கல்ல மாட்டிவிட்டுருவாரோணு தோணுது"

"எனக்கும் அந்த பயம் இருக்கு இருந்தாலும் போன்ல அவர் பேசுன தொனி அப்படி தெரியல. தவிர அவர் இன்னும் போலிஸ் போர்ஸ் அதிகப்படுத்தி தேடாம நம்மல தொடர்பு கொண்டதனால கேஸ்ல ஏதொ ஒரு சொல்ல முடியாத சிக்கல் இருக்குனு நினைக்கிறேன். எதுக்கும் போய் பேசிட்டு முடிவு பண்ணலாம்"

"சரி பாஸ்"

ஏ.சி.பி அலுவலகம். சங்கரை எதிர்பார்த்துகொண்டிருந்த இளமாறன் ஒரு சிறு புன்முறுவலுடன் வரவேற்றார் பின்னாலிருந்த ராமை பார்த்து இவன் இங்கு அவசியம் தானா என்ற பார்வையை சங்கரிடம் வீசினார். சுதாரித்து கொண்ட சங்கர் "சார் இவன் என்னோட அஸிஸ்டன்ட் ரொம்ப நம்பகமானவன் துடிப்பானவன் ஸோ நீங்க பயப்படாம கேஸ் பத்திசொல்லலாம்" என சமாளித்தான்.

இளமாறனின் குளிரூட்டப்பட்ட அந்த அறையின் நிகழ்வுகள் வெளியே செல்லாதவாறு கதவை தாழிட்டு இருக்கையில் சங்கரையும் ராமையும் அமர்த்தி நடந்த கொலைகளை பற்றி விவரிக்க தொடங்கினார்.

"சங்கர் இந்த கேஸ்ல உங்கல இன்வால்வ் பண்ண வேண்டிய கட்டாயம் ஏன் வந்ததினா இதுல போலிஸ் டிபார்ட்மென்ட் ஆட்களே சம்பந்தப்பட்டிருப்பாங்கனு ஒரு சந்தேகம் இருக்கு"

"எத வச்சு சார் சொல்றீங்க" சங்கரின் விழிகள் விரிந்தது.

"இதுவரைக்கும் செத்து போன நாலு பேரும் நாங்க போன மாசம் ரகசியமா தயார் பண்ணின கேடிகள் மற்றும் பிரபலமான ஆனால் பேக்க்ரவுன்ட்ல இல்லீகல் பிசினஸ் பண்றவங்க லிஸ்ட்ல இருக்கவங்க. அந்த லிஸ்ட் எப்படி கொலைகாரன் கிட்ட கெடச்சதுன்னு தெரில, போலிஸ்ல யாரோ அவனுக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணி இருக்கனும்"

"வெரி இன்டரஸ்டிங் சார். அந்த லிஸ்ட் தயார் பண்ணும் போது யார்யாரெல்லாம் இருந்தாங்க"

"எனக்கு மேல இருக்ற அதிகாரிகள் நெறய பேர் இருந்தாங்க பட் அவுங்கல நான் கேள்வி கேக்க முடியாது. ஆதாரத்தோட போனா தான் முடியும்"

"ம்ம்.. சிக்கலான நிலைமை தான். கொலை பத்தின டிடைல்ஸ் ஏதாவது இருக்கா.. எனிதிங் இன்டரஸ்டிங் இன் தெம்? "

"இருக்கு. நாலுமே விசித்திர கொலைகள். ரெண்டு ரெட்டை கொலைலயும் முதல் கொலை நடந்து ஒரு மணி நேரம் கழிச்சு அடுத்த கொலை நடந்திருக்கு"

"ஒரே ஆள் இதை செஞ்சிருப்பானு நம்ப்ரீங்கலா" சங்கரின் கேள்விகளை கேட்க ராம் அதை குறிப்பெடுத்து கொண்டிருந்தான்.

"அதற்கான சாத்தியகூறுகள் இருக்கு.முதல் ரெட்டை கொலையில ஒருத்தர் தாம்பரத்தில இருந்தார் இன்னொருத்தர் சைதாபேட்டைல. அந்த இன்னொரு கொலைல ஒண்ணு ஆவடில இன்னொன்னு வில்லிவாக்கதுல."

"ரெண்டு ரெட்டை கொலைளையும் அந்த இடங்களுக்கு ஒரு மணி நேரத்துல போக முடியும். ஒரே ஆள் செஞ்சுருக்க சாத்தியம் தான். வேற ஏதாவது கொலைய பத்தின டீடைல்ஸ்"

"சங்கர் நாலு பேரும் நெத்தில துப்பாக்கில சுட்டதுனால செத்திருக்காங்க"

"எப்படியும் அவுங்கல நீங்க என்கவுன்டர்ல போட்டா அப்படி தான சுடப்போறீங்க" சங்கரின் நக்கல் இளமாறனை எரிச்சலூட்டியது.

"அந்த புல்லட்ஸ் என்னோட பெர்ஸனல் ரிவால்வரோட புல்லட்ஸ்"

சங்கர் திடுக்கிட்டான். "என்ன சார் சொல்றீங்க.அந்த ரிவால்வர் இப்ப எங்க இருக்கு"

"அத யாரோ திருடிட்டாங்க.தற்காப்புக்காக நான் சொந்தமா வச்சிருந்தது அது. லைசன்ஸ் வாங்குன ரிவால்வர். நிறைய புல்லட்ஸ் வச்சிருந்தேன் எப்படியும் ஒரு நாப்பது அம்பது இருக்கும். தொலைஞ்சதுக்கு அப்புறம் தான் இந்த புல்லெட் பத்தின ரிபோர்ட் வந்துச்சு. ஸோ இப்போ கம்ப்ளைன் பண்ணா கூட எம்பேர்ல தான் சந்தேகம் வரும். இப்ப புரியுதா உங்கள ஏன் கூப்பிட்டேனு? "

"புரியுது. நிச்சயம இது உங்கள சிக்க வக்க போட்ட ப்ளான் தான்.இந்த விஷயம் வெளில தெரியாதுல்ல?"

"தெரியாது. ஆன இன்வெஸ்டிகேசன் தொடர தொடர இத ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்க. அந்த லிஸ்ட் மேட்டெர லிங்க் பண்ணா கதை முடிஞ்சுது"

"நீங்க கவலைபடாதீங்க நாங்க சைலன்டா இந்த கேஸ இன்வெஸ்டிகேட் பண்றோம். அப்புறம் அந்த லிஸ்ட் எனக்கு வேணும் அத வச்சு அடுத்த கொலை எங்க நடக்க போகுதுன்னு க்ளூ கிடைக்குதான்னு பாக்கணும்"

"நாளைக்கு காலைல வாங்க தரேன்" கூறிகொண்டே இவர்கள் வெளியேற கதவை திறந்து உதவினார். சங்கர் முகத்தின் தீவிரம் இந்த கேஸில் நிச்சயம் அவன் உதவுவான் என தோண்றிய நேரத்தில் ராமின்
முகத்திலிருந்த அந்த மெல்லிய சிறிப்பு இளமாறனை குழப்பியது.

அதே நேரம் ராமிடம் இருந்த ட்ரான்ஸ்மிட்டரின் மூலம் அங்கு நடந்த உரையாடல்கள் வெளியில் இருந்த அந்த மாருதி ஆம்னியில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

(தொடரும்)

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)