Tuesday, February 10, 2009

என்னில் நீ..

என் வானில் நீ மழை

என் கவிதையில் நீ பிழை

என் தூக்கதில் நீ கனவு

என் ஏக்கத்தில் நீ நிலவு

என் காலையில் நீ சூரியன்

என் மாலையில் நீ சந்திரன்

என் துக்கத்தில் நீ கண்ணீர்

என் தாகத்தில் நீ தண்ணீர்

என் காதலில் நீ காதலி

என் சோகத்தில் நீ உயிர்வலி

என் வெற்றியில் நீ சிரிப்பு

என் தோல்வியில் நீ வெறுப்பு

என் குளிரில் நீ போர்வை

என் வெயிலில் நீ வியர்வை

என் யாசகத்தில் நீ சில்லரை

என் மரணத்தில் நீ கல்லறை

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)