Tuesday, April 21, 2009

இன்று கற்பனை விடுமுறை

நீ இல்லாத காட்சிகளை என் கண்கள்
இமைகளோடு போராடி
விருப்பமின்றி பார்க்கிறது

கூடு விட்டு கூடு பாயத்துடிக்கும் என் இதயம்
காதல் மந்திரங்களை நீ மறந்ததால்
என் கூட்டுக்குள் விருப்பமின்றி துடிக்கிறது

உன் வாசம் தேடும் என் சுவாசம்
தோல்வியான தேடல்களுக்கு பின்
நீ இல்லாத காற்றை விருப்பமின்றி அனுமதிக்கிறது

உன் குரலின் ஓசையை தேடும் என் செவி
மௌனத்தின் சப்தத்திலும் உன்னை தேடி
நீ இல்லாத ஒலிகளை விருப்பமின்றி உள்வாங்குகிறது

காதலின் மறுப்பையே தாங்கிய என் மனம்
உன்னை காணாத சோகத்தை தாங்க முடியாமல்
இன்று விடுமுறை கேட்கிறது

நீ இல்லாத நாளை கவிதை எழுதியாவது
மறப்போம் என்று எழுத எத்தனித்து
அறியக்கண்டேன் நீ இல்லாததால்
இன்று கற்பனை விடுமுறை



1 comments:

dhatshaini said...

vidumurai naalilayae ippadiyaa ..excellent..

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)