Wednesday, April 29, 2009

உவமானங்களின் தோல்வி

வானத்தை
மேகத்தை
பூக்களை
மொட்டுகளை
கடலை
அலையை
இரவை
நிலவை
நட்சத்திரத்தை
ஆதவனை
தாமரையை
மலையை
மழையை
கடவுளை
வானவில்லை
அதிகாலையை
அந்திமாலையை
பனித்துளியை
பட்டாம்பூச்சியை
தேனை
மானை
மீனை
மெல்லினத்தை
வல்லினத்தை
அமுதை
அமிர்தை

விட்டுவிடுங்கள் உங்கள் கவிதைகளிலிருந்து
அவை தோற்று துவண்டிருக்கின்றன
என்னவளிடம்

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)