Sunday, August 16, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 3


பதிவான உரையாடல் கேசட்டுடன் ராமும் சங்கரும் அந்த ஆம்னியில் ஆபீசை அடையும் போது இரவு 9 மணி ஆயிருந்தது.

"ராம் நீ கெளம்பு நாம காலைல பேசலாம். இளமாறன் கிட்டேர்ந்து அந்த லிஸ்டும் வந்திருக்கும் அத வச்சுக்கிட்டு நாளைக்கு விசாரிக்க வேண்டியது தான்" சங்கர் கூறியதிற்கு உதட்டால் மட்டும் உம் கொட்டி ராம் புறப்பட்டான்.

சங்கரும் பல விதமான கோணங்களில் கேஸை பற்றி யோசித்துக்கொண்டே உறங்கிப்போனான்.

டீக்கடை சுரேஷ் வந்து விடியலை நக்கலாய் அறிவித்தான்.

"என்ன சார் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டையர்டா தூங்கிட்டியா "

"என்கிட்டே நல்ல வாங்கி கட்டிக்க போற" ராம் தூக்க கலக்கத்திலேயே பேசினான் .

"ஆமா உன்கிட்ட வாங்கி தான் வீடு கட்டிக்க போறேன் . போ சார்"

"டேய் காலங்காத்தால மொக்க போடாதடா. ஒரு முக்கியமான கேஸ விசாரிச்சுகிட்டு இருக்கேன். இத மட்டும் கண்டு பிடிச்சிட்டனா அப்புறம் என் ரேஞ்சே வேற" ராம் உணர்ச்சிவசப்பட்டு கூறினான்.

"என்னமோ சார். அப்புறம் உங்கள பத்தி காலைல கட பக்கத்துல ரெண்டு பேரு கேட்டுட்டு இருந்தாங்க. இங்க இட்டாரலாம்னு பாத்தேன் அதுக்குள்ளே வேணாம்னு கெளம்பிட்டாங்க "

"எதாவது கல்யாண கேஸா இருக்கும்டா "

"ஆளுங்கள பாத்தா அந்த மாதிரி தெரில சார். கொஞ்சம் மொரட்டு ஆழ இருந்தாங்க "

"சரி சரி நீ போ நான் பாத்துகறேன்" சங்கர் கூறும்பொழுதே இந்த கேஸ் விஷயம் கசிய ஆரம்பித்ததை உணர்ந்தான் .

சரியாக 9 மணிக்கு இளமாறனின் பேக்ஸ் வருவதற்கும் ராம் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. பத்து பேர் அடங்கிய அந்த லிஸ்டை பார்த்து கொண்டிருக்கும் போது இளமாறனின் அழைப்பு வந்தது .

"சொல்லுங்க சார் லிஸ்ட் இப்ப தான் வந்துச்சு பாத்திட்டு இருக்கோம். அந்த இன்னும் கொலையாகாத நாலு பேர பத்தி விசாரிக்க கெளம்பனும் "

"நாலு இல்ல சங்கர் ரெண்டு " இளமாறன் குரலில் நம்பிக்கை குறைந்திருந்தது .


"மறுபடியும் ஒரு ரெட்டை கொலையா சார் "

"யெஸ். நேத்து ராத்திரி 1 டு 2 குள்ள நடந்திருக்கு "

"சார் நான் உங்க கிட்ட நைட் பேசுறேன் இத டிலே பண்ணா மிச்ச ரெண்டு பேரையும் அவன் கொலை பண்ணிடுவான் அப்புறம் கேஸ் கஷ்டமாயிடும் "

"ஓகே சங்கர் . ஆல் தி பெஸ்ட்" சுரத்தே இல்லாமல் வாழ்த்தி இளமாறன் இணைப்பை துண்டித்தார்.

ராம் பார்வையாலே கேள்விகளை தொடுத்தான். "கெளம்பு ராம் போற வழில எல்லாத்தையும் பேசிக்கலாம்" . சங்கர் அந்த லிஸ்டுடன் புறப்பட ஆயத்தமானான் .

வண்டி புறப்புட்டு கிண்டியை தாண்டி வாகன காட்டுக்குள் கலந்தது .

"ராம் இன்னும் ரெண்டு பேர் தான் இருக்காங்க நேத்திக்கு நடந்த அந்த ரெட்டை கொலை நம்ம வேலைய கொஞ்சம் ஈசியா ஆகிருச்சு. இன்னும் ரெண்டு பேர பாலோ பண்ணா
போதும் "

"பாஸ் அந்த பத்து பேருக்கும் தொழில் ரீதியா எதாவது போட்டி இருந்து ஏன் அவுங்களுக்கு உள்ளேயே கொலை பண்ணிருக்க கூடாது போலீஸ குழப்ப ரெட்டை கொலைனு ஒரு கான்செப்ட உள்ள கொண்டு வந்திருக்க கூடாது "

"நீ சொல்றதும் யோசிக்க வேண்டியது தான். என இவுங்க எல்லாரும் இல்லீகளா தொழில் பண்ரவுங்க எல்லாத்துக்கும் துணிஞ்சவுங்க "

கார் கிரீன்வேஸ் சாலையில் ஒரு காம்பௌண்டை ஒட்டி நின்றது.

தொழிலதிபர் சாந்தாராமின் வீடு. அளவுக்கு அதிகமான சொத்து. பத்து கார்கள் அணிவகுத்து நின்றன. அவற்றில் இரண்டு வெளிநாட்டு கார்கள். மொத்தமாக 5 கிரௌண்டில் பார்ப்பவர் அனைவரின் வாயையும் பிளக்க வைக்கும் தோற்றத்துடன் மிரட்டி கொண்டு நின்றது அந்த சொகுசு பங்களா. வீட்டை சுற்றி எப்படியும் பத்து அடி உயரத்தில் சுவர். அதன் மேலே எலெக்ட்ரிக் கம்பிகள். வெளியாள் யார் வந்தாலும் கேட்டை தவிர எப்படியும் உள்ளே நுழைய முடியாது.

"சார் இத கவனிச்சீங்களா அந்த இன்னொருத்தர் அடுத்த தெருவில தான் இருக்காரு"

"ராம் இவுங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பிங்க. போட்டி வாராத மாதிரி தொழில பிரிச்சு செய்றவங்க. மெட்ராஸ்ல ரொம்ப பிரபலம் "

ராமை காரிலேயே நிறுத்தி கேட்டை நோக்கி நடந்தான் சங்கர். அங்கு செக்யூரிடியிடம் ஏதோ பேசிவிட்டு வந்தான்.

"ராம் அந்த செக்யூரிட்டி கிட்ட காசு கொடுத்து சந்தேகப்ற மாதிரி யாரவது வந்தா ஒடனே போன் பண்ண சொல்லிருக்கேன். அடுத்து அவரு தம்பி துக்காராம் வீட்டுக்கு போவோம் "

சாந்தாராமின் வீட்டை அச்சில் வார்த்ததை போல் இருந்தது துக்காராமின் வீடு.அங்கும் செக்யூரிடியை கவனித்து விட்டு ஆபீசிற்கு வந்தார்கள். இவர்களை பார்த்து சுரேஷ் ஓடி வந்தான்.

"சார் உங்க கிட்ட ஏதோ கல்யாண கேஸ் கொடுக்கணும்னு ரெண்டு பேர் வந்தாங்க. நான் நீங்க வெளில போயருக்கீங்கனு சொன்னேன் வெயிட் பண்ணி பாக்றேன்னு உங்க ஆபீஸ்ல உக்காந்து டீ கொண்டு வர சொன்னாங்க. வந்து பாத்தா அவுங்கள காணோம் "

"காலைல சொன்னியே அதுல யாரவது வந்தாங்களா"

"அவுங்கள்ல ஒருத்தர் வந்தாரு சார்" சுரேஷ் முடிக்கவும் சங்கருக்கு பொறி தட்டியது.

"ராம் ஆபீஸ் புல்லா தேடு எதாவது புதுசா பொருள் இருக்கனு பாரு. கவிக் கவிக் ராமை துரிதப்படுத்தி கொண்டே இளமாறனை செல்பேசியில் அழைத்தான்.

"ஹலோ Mr.இளமாறன்"

"நீங்க யார் பேசுறது" மறுமுனையில் பழக்கப்படாத குரல் கேட்டது.

"அவரோட ப்ரெண்ட் பேசுறேன். என் பேரு சங்கர்"

"இளமாறன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மர்மமான முறையில கொலை செய்யபட்டுருக்கார். நீங்க உங்க அட்ரஸ் தரீங்களா கொஞ்சம் விசாரிக்கணும்" சங்கர் விக்கித்து நின்றான்.

தன்னை சுற்றி ஒரு சிலந்தி வலை பிண்ணப்படுவதை உணர்ந்தான் .

(தொடரும்)

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)