Thursday, April 29, 2010

வாக்குமூலம் - சிறுகதை


" இன்ஸ்பெக்டர்! இன்ஸ்பெக்டர்! "

"பதட்டப்படாம சொல்லுங்க. என்ன விஷயம்"

"என் பெயர் சுந்தர். என் மனைவிய ஒருத்தன் கொலை பண்ணிட்டான். இப்ப என்ன கொல்ல துரத்திட்டு வரான். நீங்க தான் என்ன காப்பாத்தணும்"

"பயப்படாதீங்க மிஸ்டர் சுந்தர். அதான் என்கிட்டே வந்துடீங்கல்ல. நடந்தத சொல்லுங்க. நான் ரிப்போர்ட் எழுதிக்கிறேன்"

"அது இன்ஸ்பெக்டர் என் மனைவி பேரு காவ்யா. சாப்டுட்டு ரெண்டு பெரும் தூங்க போனோம். திடீர்னு கதவு தட்டுற சத்தம் கேக்குதுன்னு எந்திருச்சு போனா. ரொம்ப நேரம் ஆகியும் வரல. என்னனு நான் போய் பாத்தா ரத்தவெள்ளத்துல கிடந்தா. நான் பயந்து போய் சுத்திமுத்தி பாத்தேன் அப்ப ஒரு உருவம் கத்தியோட என் பின்னாடி வந்துச்சு. நான் உடனே ஓடி வெளில வந்து நேரா இங்க தான் வரேன்"

"சுந்தர், செத்துப்போனது உங்க மனைவி தான"

"ஆமா இன்ஸ்பெக்டர்"

"உங்க முகத்த பாத்தா நீங்க அழுத மாதிரியே தெரியலையே"

"அது.. அது.. பதட்டத்துல என்ன பண்றதுனே புரியல .. அதுனால .. அதுனால... அழ தோணல "

" கரெக்ட் தான். அந்த ஷாக்ல நீங்க அழல "

"ஆமா இன்ஸ்பெக்டர் அப்படி தான் "

"உங்க டிரஸ் பாத்தா நீங்க ஓடி வந்த மாதிரி தெரிலையே. வேர்வையே இல்ல. உங்க முகமும் வேர்க்கல"

"இன்ஸ்பெக்டர் நீங்க என்ன சந்தேகப்படற மாதிரி தெரியுது. என் ட்ரெஸ்ல ரத்தம் இருந்துச்சு அதுனால நான் இந்த டிரஸ் மாத்திட்டேன்"

"நல்லாருக்கு சுந்தர். இப்ப தான் ஒரு உருவம் கத்தியோட என் பின்னாடி வந்துச்சு. நான் உடனே ஓடி வெளில வந்து நேரா இங்க தான் வரேன்னு சொன்னீங்க. ஆனா இப்ப டிரஸ் மாத்தினேனு சொல்றீங்க. "

"அது.. வந்து.. நான் என் பொண்டாட்டிய கட்டி பிடிச்சு அழுதபோது ரத்தம் என்மேல பட்டுச்சு. எங்க வெளில வரும்போது எல்லாரும் என்ன கொலைகாரனு சொல்லிடுவாங்களோனு மாத்திட்டேன்."

" நீங்க சொல்றது எல்லாமே முன்னுக்கு பின் முரணா இருக்கே சுந்தர். கவனிச்சீங்களா? "

"நீங்க இன்னும் என்ன சந்தேகப்படுறீங்கனு நினைக்கிறேன்" .

"இல்ல சுந்தர். நீங்க சொல்லுங்க "

"நானும் என் மனைவியும் என்னல்லாமோ திட்டம் போட்டுருந்தோம். ஆனா இப்படி ஆய்டுச்சு. ஆனா இன்ஸ்பெக்டர் கொலை பண்ணுனவன் கதவ உடைச்சிட்டு உள்ள வரல. அதுனால கண்டிப்பா தெரிஞ்சவனா தான் இருக்கணும்"

"உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா "

"இருக்கு. நிச்சயமா இருக்கு. காவ்யவோட காலேஜ்ல கூட படிச்ச ஒருத்தன் இருக்கான். அடிக்கடி வீட்டுக்கு வருவான். நான் பிரெண்ட்ஸ் தான அப்படின்னு கண்டுக்காம விட்டுட்டேன். ஆனா மனசுக்குள்ள உறுத்தல் இருந்துட்டே இருந்துச்சு. ஒரு நாள் காவ்யா கிட்ட நேராவே கேட்டுட்டேன். அவ ஒண்ணும் இல்லன்னு சொன்னா. அவன் வரது எனக்கு பிடிக்கலன்னு சொன்னேன்"

"இதுனால வீட்டுல சண்டை எதாவது போட்டீங்களா"

"இல்ல. காவ்யாவே உங்களுக்கு பிடிக்கலனா அவன வர வேணாம்னு சொல்லிடறேனு சொல்லிட்டா. அப்புறம் ஒரு வாரம் அவன் வரல. எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. ஆனா ஒரு நாள் மத்தியானம் வீட்டுக்கு வந்து பாத்தா அவன் கூட பேசிட்டு இருந்தா. எனக்கு கோபம் வந்துச்சு ஆனா எதுவும் பேசாம நான் உள்ள போகாம வந்துட்டேன். நான் இவளோ சொல்லியும் என்ன மதிக்காம அவன் கூட பேசிட்டு இருந்தான்னு உள்ளுக்குள்ள அடக்க முடியாத கோபம் வந்துச்சு"

"இது என்னைக்கு நடந்துச்சு சுந்தர் "

"இன்னிக்கு தான். என்ன மதிக்காதவ இனி உயிரோட இருக்கா கூடாதுன்னு முடிவு பண்ணுனேன். அதுனால கத்திய எடுத்து குத்தி கொன்னுட்டேன்"

"அப்ப கொலையா நீங்க தான் செஞ்சீங்கனு ஒத்துக்கறீங்களா"

"இல்ல இல்ல. நான் பண்ணல. அவள கொன்னது அவளோட காலேஜ் பிரெண்ட்ணு சொல்லிட்டு வந்தவன் தான்"

"அது தான் நடந்துச்சா இல்ல அப்படி நடந்ததா நான் நம்பணுமா"

"இன்ஸ்பெக்டர்........ எனக்கு ஒரே குழப்பமா இருக்கு இன்ஸ்பெக்டர். கொஞ்சம் தண்ணி கெடைக்குமா"

"இதோ கொண்டு வர சொல்றேன்"

"இன்ஸ்பெக்டர்.. நீங்க ஏன் வெள்ளை கோட் போட்டுருக்கீங்க?" . சுந்தரின் கேள்வியில் பதில் இருந்தது.

5 comments:

Arun said...

அந்த ட்விஸ்ட் புரியவேயில்ல...

மனுநீதி said...

இன்னொரு தடவ படிச்சு பாருங்க. அப்பவும் ட்விஸ்ட் புரியலனா நான் நாளைக்கு ஆபீஸ்ல சொல்றேன் :)

VISA said...

எனக்கும் என்னோடு மேலும் பதினாறு பேருக்கும் டிவிஸ்ட் புரியவில்லையாம் படை எடுக்கிறோம் உங்க ஆபீஸுக்கு அட்ரஸ் பிளீஸ்:)

நல்ல டிவிஸ்ட் அதுக்கேத்த மாதிரி உரையாடல்

Innoru Loosu said...

அந்த ட்விஸ்ட் புரியவேயில்ல...
Antha aalu loosu, doctor ai inspector nnu ninaichu peesikittu irukkaan

INDIA 2121 said...

NANTRAGA IRUNTHATHU
VISIT MY BLOG WWW.vaalpaiyyan.blogspot.com
junior vaalpaiyyan

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)