Saturday, August 14, 2010

கண் மணியே பேசு - 4


கணேஷின் கார் வீட்டை சென்றடைந்த நேரம் நிர்மலாவின் பிணம் அவர் அலுவலகத்தில் இறக்கப்பட்டு கொண்டிருந்தது.

சாவித்திரி சலனமில்லாமல் உறங்கிகொண்டிருந்தாள் .

கணேஷுக்கு இரவு விடியாமல் நீண்டு கொண்டே போவது போன்ற உணர்வு ஏற்படிருந்தது. யோசித்து கொண்டே உறங்கிபோனார்.

காலையில் சாவித்திரி குளித்து முடித்து காபியுடன் வந்து அவரை எழுப்புகையில் இரவு நடந்தது எல்லாம் மனதிற்குள் தோன்றவில்லை.

சாவித்திரியின் கண்கள் ஆனால் ஏதோ பதிலை எதிர்பார்த்து கொண்டிருந்தது கணேஷிற்கு புரிந்தது .

"போலீஸ்கு காசு குடுத்து லாரிய ரிலீஸ் பண்ணிடேம்மா "

சாவித்திரி திருப்தி அடையவில்லை. "அத பத்தி சொல்ல வரலங்க. நேத்து நீங்க போனப்புறம் மறுபடியும் அந்த பொண்ணு பத்தின கனவு வந்துச்சு "

காபி எழுப்பி விடாத உணர்வுகளை சாவித்திரி எழுப்பிவிட்டாள்.

"கனவுல என்னமா வந்துச்சு. அந்த பொண்ணு பிணத்த தோண்டி எடுத்தாச்சா "

"அது தான் நான் முன்னாடியே சொன்னேனே. போலீஸ் பிணத்த தோண்டி எடுத்துட்டாங்க"

"போலீசா?" கணேஷ் இரவு நடந்ததை நினைத்து பார்த்து குழம்பினார்.

"ஆமாங்க போலீஸ் தான் . இப்ப பிணத்த எதோ ஒரு பாக்டரிக்கு கொண்டு போனாங்க"

"பாக்டரியா? பேரு எதாவது தெரிஞ்சுதா? "

"இல்லங்க. பாத்தா நம்ம பாக்டரி மாதிரி தெரிஞ்சுது "

"என்னது நம்ம பாக்டரியா ?"

"இல்லங்க .. இருக்காது .. எனக்கு தான் நம்ம பாக்டரி நல்லா தெரியுமே.. பாக்க அப்படி இருந்துச்சு ஆனா அந்த இடம் நான் இது வரைக்கும் பாத்ததே இல்ல "


"சரி சரி. விடு. நமக்கென்ன. நம்ம கவலைப்பட வேண்டிய விஷயமா என்ன" கணேஷின் பதிலில் கவலை இருந்தது.

"ஆமாங்க. நீங்க சொல்றதும் சரி தான்" சாவித்திரி ஒரு வினோத புன்னகையுடன் விஷயத்தை முடித்தாள்.

கணேஷின் பாக்டரியின் எல்லா இடத்தையும் சாவித்திரிக்கு காட்டியதில்லை. ரகசியமான அந்த ஒரு பகுதியை சாதரணமாய் யாரும் கவனித்திட முடியாது. சாவித்திரியும் கவனித்ததில்லை அவரிடம் அதை பற்றி கேட்டதும் இல்லை. ஆனால் அவள் கனவில் பார்த்ததாக கூறியது அந்த ரகசிய பகுதியை போல இருந்தது. அவசரமாக அங்கு கிளம்பினார்.

சாவித்திரி அவரை தடுக்கவில்லை. அந்த வினோத புன்னகையும் அவளை விட்டு விலகியிருக்க வில்லை. கணேஷ் சென்று வெகு நேரம் ஆகியும் புன்னகை மாறவில்லை.



கணேஷ் அலுவலகத்துக்கு சென்று அருகில் இருக்கும் பாக்டரிகுள் நுழைந்தார் . நேராக அந்த ரகசிய அறைக்குள் சென்றார். அறை என்பதை விட அது பரந்து கிடக்கும் பூமி என்றே சொல்லலாம். எப்படியும் நான்கு அல்லது ஐந்து கிரௌண்ட் பரப்பு இருக்கும். மண்தரை. ஆங்காங்கே மண் குவியல்கள் . வெளியில் இருந்து பார்த்தால் வெறும் சுவர் போல தான் தெரியும் ஆனால் அந்த சுவருக்கு அந்த பக்கம் செல்ல படிகட்டுடன் கூடிய ஒரு ரகசிய வழி இருபது கணேஷுக்கு மட்டும் தான் தெரியும். அல்லது அவருக்கு மட்டும் தான் தெரியும் என்பது கணேஷின் அனுமானம் .

கணேஷ் படியில் அந்த அறைக்கு செல்ல ஆயத்தமானார்.

அங்கு காத்திருக்கும் பயங்கரங்களை அறியாமல்.

(திகில் தொடரும்)

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)