Saturday, August 21, 2010

கண் மணியே பேசு - 5


கணேஷை வரவேற்க அந்த ரகசிய அறைக்குள் பிணத்துடன் காத்திருந்தனர் அந்த நான்கு கண்களுக்கு சொந்தகாரர்கள்.

"என்ன மிஸ்டர் கணேஷ் எங்கள இங்க எதிர்பார்கலல?"

"நீங்க..நீங்க... யாரு? நான் இதுக்கு முன்னாடி பாத்ததே இல்லையே "

"பயப்படாதீங்க கணேஷ். நாங்க உங்களுக்கு வேண்டியவங்க தான்"

"வேண்டியவங்களா? "

"பின்ன. போலீஸ் கிட்ட நீங்க கொலை செஞ்ச நிர்மலாவோட பிணம் சிக்காம இருக்க நாங்க தோண்டி எடுத்துட்டு வந்து உங்கள காப்பாத்துணோமே. அப்ப நாங்க உங்களுக்கு வேண்டியவங்க தான? "

"நிர்மலாவ நான் கொலை பண்ணேனா?"

"போதும் மிஸ்டர் கணேஷ். நிர்மலாவ மயக்குறதுக்கு யூஸ் பண்ண க்ளோரோபார்ம்ல விஷம் கலந்து அவள நீங்க கொலை பண்ணது எங்களுக்கு தெரியும்"

"வாட் நான்சென்ஸ்"

"நீங்க அந்த பழிய உங்க ஆட்கள் மேல போட முயற்சி செஞ்சது கூட எங்களுக்கு தெரியும் "

"நீங்க நல்லா கற்பனை பண்றீங்கன்னு நினைக்றேன். உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். உங்களுக்கு இப்ப என்ன வேணும் "

"மிஸ்டர் கணேஷ் எங்களுக்கு என்ன வேணும்னு நாங்க அப்புறம் சொல்றோம். ஆனா நீங்க தப்பு செய்யலன்னு மட்டும் சொல்லாதீங்க. நிர்மலா பிணத்த போலீஸ் பிடிச்சு போஸ்ட் மார்டம் செஞ்சா எல்லாம் தெரிஞ்சிடும்"

"தாராளமா செய்ங்க. நிர்மலா மூச்சு திணறி செத்தானு தான் வரும் "

"கணேஷ், உங்களுக்கு இன்னும் பல விஷயங்கள் புரியலன்னு நினைக்றேன்"

---------------------------

பாண்டிச்சேரி .

"சார், அவங்கள அப்பவே பிடிச்சிருக்கலாமே ஏன் விட்டுட்டு இப்ப அந்த பசங்கள பிடிக்க போறோம் "

"எல்லாம் ஒரு காரணமா தான் கண்ணையன். அங்கேயே அவங்கள பிடிச்சிருந்தா நமக்கு அவங்க அங்க வந்ததுக்கான உண்மையான கரணம் தெரியாம போயிருக்கும்" இளமாறன் பதிலில் ஒரு திட்டம் உருவாகியிருந்தது தெரிந்தது.

"அப்ப அவங்க வந்தது அவங்க சொன்ன காரணத்துக்காக இல்லையா? "

"நிச்சயமா இல்ல. அந்த டெலிபோன்ல வந்த தகவல் படி எதோ புதைக்க தான் தோண்டிருக்காங்க. ஆனா இவுங்க சொன்ன சுண்டக்கஞ்சி கதை நம்பும்படியா இல்லை"

"அப்ப அவரோட ஆட்கள புடிச்சு உண்மைய விசாரிச்சிடலாமா? "

"அது ரொம்ப ஈஸி இல்ல. இத லத்தியால செய்றத விட புத்தியால செஞ்சா தான் உண்மை தெரியும் "

"சார்! சார்!. அவனுங்க வண்டி அங்க நிக்குது பாருங்க"

"கண்ணையன், நீங்க போய் அவனுங்கள கூட்டிட்டு வாங்க. நான் இங்க நிக்றேன் "

"சரி சார்"

அந்த கும்பல் போலிசை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சாமர்த்தியமாக ஒரு பெரும் சிக்கலில் இருந்து நழுவியதாக நினைத்து கொண்டிருந்தார்கள். அந்த நினைப்பில் மூழ்கி இருந்தவர்களை கண்ணையனின் குரல் சற்றே பயமுறுத்தியது.

"டேய் . எல்லாரும் வெளிய வாங்க. சப்-இன்ஸ்பெக்டர் சார் கூப்டுறாரு"

"ஏன்? எதுக்கு? .. நாங்க என்ன செஞ்சோம்"

"பதில் சொன்னா தான் வருவீங்களா. வாங்கடா" கண்ணையனின் உருட்டலில் சப்தம் மொத்தமாக அடங்கியது.

"சார், எதுக்கு சார் எங்கள கூப்டீங்க" கும்பலின் தலைவன் பாண்டி தான் முதலில் பேசினான்.

"எதுக்கா.. தெரியாத மாதிரி கேக்றீங்க. ஒரு பொண்ண புதைச்சிட்டு அப்புறம் ஏதும் தெரியாத மாதிரி என் கிட்டே கதை சொல்லிட்டு போனீங்க" இளமாறன் போட்டு வாங்க முயன்றார்.

"என்ன சார் சொல்றீங்க. நாங்க புதைச்சோமா? . நீங்க அங்க தான் செக் பண்ணீங்களே சார். பிணம் ஏதும் கிடைக்கலையே "

"சமாளிக்கிறதா நெனச்சுட்டு பொய் சொல்லிட்டே போகாத. மாட்னா அப்புறம் வெளிய வர முடியாத அளவுக்கு ஆய்டும்"

"சார் சும்மா மிரட்டாதீங்க. நீங்க என்ன கேட்டாலும் இது தான் என் பதில்"

"நிச்சயமா?"

"நிச்சயமா சார்"

"எங்க ஆளுங்க கணேஷ பிணத்தோட புடிச்சிருகாங்கனு சொன்னா கூடவா "

இளமாறனின் சற்றும் எதிர்பாராத அந்த பதிலில் அனைவருமே திகைத்தனர்.

கண்ணையன் ஆச்சர்யத்தில். மற்றவர்கள் அதிர்ச்சியில்.

அடுத்து வரும் வார்த்தைகள் தங்கள் வாழ்கையையே தீர்மானிக்கும் என பாண்டிக்கு புரிந்தது.

(திகில் தொடரும்)

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)