Saturday, August 28, 2010

கண் மணியே பேசு - 6


சாவித்திரி ஒரு வித குழப்பத்துடன் காத்திருந்தாள் .

ஆனால் அந்த குழப்பத்தில் ஒரு தெளிவு இருந்தது .

கணேஷை எதிர்பார்த்து காத்துக்கொண்டே இருந்தாள். அவளின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் கணேஷ் வந்து சேர்ந்தார்.

"என்னங்க ரொம்ப சோர்வா இருக்கீங்க. எதாவது பிரச்சனையா? "

"இல்ல அந்த சரக்கு கொண்டு போன லாரி சம்பந்தமா தான் பேசிட்டு இருந்தேன் "

"ஆமா மறந்துட்டேன். அந்த பிரச்சனை எல்லாம் சுமுகமா முடிஞ்சுதா ? "

"அது எல்லாம் ஓவர். ஆமா அந்த தலைசுத்தி கண் மணி உருட்டி மறுபடி கனவு எதாவது வந்துச்சா "

"இல்லங்க. அதுக்கப்புறம் எதுவும் வரல"

"நல்லது. சரி நீ சாப்பிட எதாவது எடுத்து வைம்மா "

"நீங்க டைனிங் டேபிளுக்கு வாங்க. நான் எல்லாத்தையும் எடுத்து ரெடியா தான் வச்சுருக்கேன்"

கணேஷ் முகம் கழுவி டைனிங் டேபிள் வந்தபோது உணவுடன் சொத்து பத்திரங்கள் அவரை வரவேற்றன .

"சாவித்திரி.. இது என்ன பத்திரம் எல்லாம் இங்க இருக்கு "

"என்னங்க மறந்துட்டீங்களா.. நீங்க தான இத எல்லாம் எடுத்து வைக்க சொன்னீங்க நான் எதுக்குனு கேட்டாலும்
நீங்க சரியா பதில் சொல்லல"

"வாட். நான் ரெடி பண்ண சொன்னேனா? "

"ஆமாங்க. வக்கீல் ராமநாதன கூட வர சொன்னீங்களே "

"என்னம்மா குழப்புற "

குழம்பிய நிலையில் ராமநாதனை தொடர்பு கொண்ட போது அங்கு தான் வந்து கொண்டிருப்பதாக கூறி துண்டித்தார். துண்டித்து கணேஷின் நிலையை மேலும் குழப்பமாக்கினார்.

கணேஷுக்கு இது துளி கூட விளங்கவில்லை. சொத்து சம்பந்தமாக கடந்த இரண்டு நாட்களில் பேசியதாக நினைவில்லை. ஆனால் அன்று காலை அலுவலகத்தின் ரகசிய அறையில் நடந்தது மட்டும் உண்மை என புரிந்தது . அவர்களை மீண்டும் சந்தித்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று தெரிந்தது.

"மிஸ்டர் கணேஷ் நிர்மலா செத்தது உங்க விஷத்துனால தான்னு எங்களுக்கு தெரியும் "

"சத்தியமா நான் க்ளோரோபார்ம் தான் குடுத்தேன். அவ அதுல சாக சான்ஸ் இல்ல"

"நீங்க யூஸ் பண்ணது க்ளோரோபார்ம் பாட்டில் தான். ஆனா அதுக்குள்ள இருந்தது க்ளோரோபார்ம்னு உங்களுக்கு நிச்சயமா தெரியுமா"

"அது .. வந்து.. "

"மிஸ்டர் கணேஷ் நீங்க ஒண்ணு புரிஞ்சுகோங்க. நீங்க எங்கள கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. உண்மையா சொல்ல போனா உங்கள பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்த தான் இங்க வந்தோம்"

"என்ன ஆபத்து . அப்புறம் என்னை காப்பாத்துறதுல உங்களுக்கு என்ன லாபம்"

"லாபம் இருக்கு, ஆனா அது என்ன. நாங்க யாருன்னு கேக்காதீங்க. இந்த நேரத்துல அத நீங்க தெரிஞ்சுகறது உங்களுக்கும் நல்லது இல்ல எங்களுக்கும் நல்லது இல்ல"

"சரி. எனக்கு தெரிஞ்சதெல்லாம் இது தான். நிர்மலாவ மிரட்டி இன்னும் எங்களுக்கு எதிரா எதாவது ஆதாரம் இருந்தா வாங்க தான் வர சொன்னேன் . ஆனா விஷயம் கை மீறி போய்டுச்சு "

"இல்ல கணேஷ்.. கை மீறி போல. கை மீறி போக வைக்கப்பட்டிருக்கு. உங்களுக்கு எதிரா ஒரு கூட்டம் செயல்பட்டுட்டு இருக்கு. அத பத்தி நாங்க விலாவரியா அப்புறம் சொல்றேன். நீங்க ஒடனே வீட்டுக்கு போங்க"

"ஏன் .. எதுக்கு . அப்ப இந்த பிணம் "

"அத நாங்க பாத்துக்றோம். உங்கள காப்பாத்த பாண்டிச்சேரில இருந்து இத கொண்டு வந்தோம் , இங்க இருந்து அப்புறபடுத்துறதா கஷ்டம். நீங்க உடனே வீட்டுக்கு போங்க. அங்க நடக்க போற விஷயங்கள் உங்களுக்கு கொஞ்சம் தெளிவ ஏற்படுத்தும் "

அவர்கள் கூறியது கணேஷ் மனதில் ஓடி கொண்டிருந்தது. அந்த காலிங் பெல் ஓசை அந்நினைவை கலைக்கும் வரை.

"என்னங்க வக்கீல் வந்துட்டாரு போல"

"சரி இரு நான் போய் பாக்றேன் "

கதவை திறந்த கணேஷ் இளமாறனை கண்டு திகைத்தார் .

"இது யாரு? அதோ கேட் பக்கத்துல வக்கீல் வந்துட்டார் பாருங்க" இளமாறனை கண்டு திகைத்த சாவித்திரி வக்கீல் ராமநாதனை கண்டதும் சாந்தமடைந்தாள் .

"ஹலோ.. மிஸ்டர் கணேஷ். எப்படி இருக்கீங்க.. போலீஸ் இங்க என்ன பண்றாங்க" இரு கேள்விகளை கேட்டு கணேஷை பார்த்த ராமநாதனை சாவித்திரி வரவேற்று உள்ளே கொண்டு போனாள் .

கணேஷ் ஏற்கனவே இருந்த குழப்பத்தில் ராமநாதன் சாவித்திரியிடம் ஒரு வித அன்னியோன்யம் இருப்பதை கவனிக்கவில்லை.

இளமாறன் நடந்தவைகளை உள்வாங்கி கொண்டு தன் கம்பீர குரலில் வந்த வேலையை பார்க்க துவங்கினார்.

"யு ஆர் அண்டர் அரெஸ்ட்" கர்ஜித்தார்.

"சார்.. நான் என்ன பண்ணேன்" கணேஷ் முகத்தில் அப்பாவித்தனத்தை காட்டிகொண்டிருந்தார் .

"உங்கள இல்ல மிஸ்டர் கணேஷ். அவங்கள " இளமாறனனின் பார்வை கணேஷை கடந்து சென்றது.

(திகில் தொடரும்)

5 comments:

VISA said...

HEI SUPER THRILL

மனுநீதி said...

Thanks Visa

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை.......

அருண் said...

எழுத்து நடை அருமை,முடிந்தளவு விறு விறுப்பையும் கூட்டுங்கள்.

மனுநீதி said...

நன்றி உலவு

கருத்துக்கு மிக்க நன்றி அருண். முடிந்தவரை கண்டிப்பாக விறுவிறுப்பை கூட்ட முயல்கிறேன்.

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)